சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்!

229

சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்!

மதுரை மாவட்டம் சோலைமலை என்ற ஊரில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்தக் கோயிலில் மூலவராக தம்பதியருடன் முருகன் காட்சி தருகிறார். கோயிலின் தல விருட்சமாக நாவல் மரம் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, ஆவணி புரத்தில் வருஷாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படை வீடாகும். சாதாரணமாக நாவல் மரத்தில் ஆடி, ஆவணி மாத த்தில் தான் பழுக்கும். ஆனால், இந்தக் கோயிலில் சஷ்டி மாதமாகிய ஐப்பசி மாதத்தில் பழுக்கும்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் முருகப் பெருமான் அருள்பாலிப்பது இந்தக் கோயிலில் மட்டுமே. கந்த  சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. முருகன் ஔவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டாமா? என்ற திருவிளையாடல் நிகழ்த்தியது இந்தக் கோயிலில் தான்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கல்வியில் சிறந்த விளங்க இந்தக் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமியை பிரார்த்தனை செய்கின்றனர். அப்படி, தாங்கள் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்துள்ளது. பிற்காலத்தில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது. முருகனுக்கு வலதுபுறம் வித்தக விநாயகர் வீற்றியிருக்கிறார்.

அறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலிலுள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் புனிதமானது. மலையடிவாரத்தில் கள்ளழகர் கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன. சாதாரணமாக நாவல் மரத்தில் ஆடி, ஆவணி மாத த்தில் தான் பழுக்கும். ஆனால், இந்தக் கோயிலில் சஷ்டி மாதமாகிய ஐப்பசி மாதத்தில் பழுக்கும்.

முருகன் மீது அதிக அன்பு கொண்டவர் ஔவையார். முருகப் பெருமான் ஔவைக்கு அருள் புரிந்து இந்த உலகத்திற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார். ஒரு நாள் ஔவையார் கடும் வெளியிலில் களைப்புடன் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். ஔவையார் செல்லும் வழியில் மாட்டுக்கார சிறுவனமாக வேடமணிந்து முருகப் பெருமான் ஒரு நாவல் மரக்கிழையில் அமர்ந்து கொண்டார்.

களைப்புடன் வந்த ஔவை பாட்டி இந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார். இதைப் பார்த்த சிறுவன் வடிவில் வந்த முருகன், என்ன பாட்டி மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே! தங்களது களைப்பை போக்க நாவல் பழம் வேண்டுமா? என்றான். பாட்டியோ, வேண்டும் என்று கூறவே, சிறுவன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஔவையார், சுட்ட பழத்தையே கொடு என்று கேட்டுள்ளார்.

சிறுவன், மரக்கிளையை உலுக்கினான், நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால், மணல் அதில் ஒட்டிக் கொண்டது. அதையெடுத்து, அதிலிரிந்த மணலை வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், என்ன பாட்டி பழம் சுடுகிறதோ? ஆறியவுடன் கூறி சிரித்தான். சிறுவனின் அறிவுக் கூர்மையை எண்ணி வியந்த ஔவை பாட்டி மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல், என்பதை புரிந்து கொண்டார். அதன் பின்னர், முருகப் பெருமான் தனது சுய வடிவில் ஔவை பாட்டிக்கு அருள் புரிந்தார். இந்த திருவிளையாடல் மூலம் முருகன் உலகிற்கு ஒரு தத்துவத்தை உயர்த்தினார்.

அதாவது, உயிர்களின், மீது உலகப்பற்று என்னும் மணல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது, இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால், இறைவனை உணரலாம் என்பதே அந்த தத்துவம்.