அற்புத பலன் தரும் லலிதா நவரத்தினமாலை!
நவராத்திரி என்றால் ஒன்பது இரவு எனப் பொருள்படு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்றும் அர்த்தம் உண்டு 9 இரவுகளும் அம்மனை வழிபடும் உன்னதமான திருவிழா தான் இந்த நவராத்திரி. அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தாம் மேற்கொண்ட காலம் தான் இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது
அலைமகள் கலைமகள் மலைமகள் என முப்பெரும் தேவியரும் ஒரே ரூபமாக வந்து மகிஷாசுரனை வதம் செய்த நாளாகும். ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் நல்ல குணங்களை அழிப்பதற்காக தன்னைத்தானே பக்குவப்படுத்திக் கொள்ள கூடிய தவ காலம் ஆகும். இந்த 9 நாட்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த நவராத்திரி தினத்தன்று நாம் பாராயனம் செய்ய வேண்டிய அகத்தியர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தினமாலை துதிப்போம்.
அற்புத பலன் தரும் லலிதா நவரத்தினமாலை:
அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.
ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை:
லலிதா அன்னையை போற்றி புகழும் அற்புதமான பாட்டு. அம்மனை 9 நவரத்தினங்களாக வர்ணித்து, பிறகு இந்தப் பாடலின் பயனையும் குறிக்கிறது. இந்தப் பாடலை தினமும் வீட்டில் பாடினால் அவ்வளவு நல்லதல்ல. சகல விதமான சந்தோஷங்கள், சம்பத்துகள் கிடைப்பது உறுதி.
பாடல் இயற்றப்பட்ட முறை:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் என்னும் தலத்தில் அகத்தியருக்கு ஹயக்ரீவர் லலிதா சஹசர நாமத்தை உபதேசித்தார். ஒரு பௌர்ணமி அன்று அகத்தியரும் திருமீயச்சூர் தலத்தின் நாயகியான லலிதாம்பிகையை லலிதா சஹசர நாமத்தை கூறி வழிபட்டார். அப்போது மனமகிழ்ந்த அம்மை அகத்தியருக்கு நவரத்தினங்களின் வடிவாக காட்சி அளித்தாள்.
அகத்தியர் தான் கண்ட அம்மனின் திருவுருவத்தை லலிதா நவரத்தின மாலையாக எல்லோருக்கும் எளிதில் புரியும்படி பாடினார். இதனை தினமும் கூறி வழிபட செல்வ செழிப்புடன் சகல நன்மைகளும் கிடைக்கும்.
பிள்ளையாரே முழுமுதற் தெய்வம். அவரே கணங்களின் அதிபதி. ஆகையால் அவரை துதித்த பின்னர் லலிதாம்பிகையை வணங்குவோம்.
ஸ்ரீ கணேசர் துதி
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்
ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல்:
நவரத்தினங்களான, வைரம், நீலம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம் (புஷ்பராகம்), வைடூரியம் முதலியவற்றைக் குறிக்கும் சொற்களின் மூலம் அம்பிகையைத் துதிப்பதாக அமைந்துள்ள பாடல் இது. இதைப் பாடுவோர், அம்பிகையின் கருணையால் சிவரத்தினமாய்த் திகழ்வார் என்று நூற்பயன் கூறுகிறது.
காப்பு:
ஆக்கும் தொழில் ஐந்து அரன் ஆற்ற நலம்பூக்கும்
நகையாள் புவனேஸ்வரி போல் சேர்க்கும் நவரத்தின
மாலையினைக் காக்கும் கண நாயக வாரணமே!
வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன் வானதவம்
பெற்றும் தெரியார் நிலை எண்ணில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள் கணையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (1)
நீலம்
மூலக் கனலே சரணம் சரேம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோல கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன்
அருள்வாய் வாலைக் குமரீ வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (2)
முத்து
முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸினியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணை வாழ்வு உடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (3)
பவளம்
அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழியலாம் இது செய்தவள் யாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவருக்கு அருள் எண்ணம் மிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (4)
மாணிக்கம்
காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாக் பொலியானவளே புனையக் கிடையாப் புதுமைத் தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (5)
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்று அடியவர் குழும் அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (6)
கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல் யாழ் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (7)
பத்மராகம் (புஷ்பராகம்)
ரஞ்சினி நந்தினி அங்கணி பதும ராகவி காஸவி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்கிருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (8)
வைடூர்யம்
வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறையாறு ஒலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (9)
நூற்பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே (10)