எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்?
வீட்டில் தினமும் தூபம் போடுவது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஞாயிறு:
ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வரனின் அருள் கிட்டும்.
திங்கள்:
தேக, மன ஆரோக்கியம், மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.
செவ்வாய்:
எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய-எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தி.
புதன்:
நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன்:
சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி:
இலட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி, வெற்றி உண்டாகும்.
சனி:
சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.