தடைகள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

195

தடைகள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி என்ற ஊரில் உள்ள கோயில் பாலமுருகன் திருக்கோயில். இந்தக் கோயிலில் பாலமுருகன் மூலவராக காட்சி தருகிறார். இந்த பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, மாத கார்த்திகை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. திருவடிச்சுவடுகள் மண்ணில் புதைந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக் கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது.

மேலும், அதற்கு அடுத்தாற்போல உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. இந்தக் கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இந்தக் கோயிலிலிருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண் மேடு உள்ளது. இந்த மண்ணே கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த மண்ணே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

பழம் பெரும் புராணங்கள் எழுப்ப சில முக்கிய காரணங்கள் இருக்கும். அவற்றை ஸ்தல புராணங்கள் என்கிறோம். அந்தந்த இடங்களில் நடந்த தெய்வீக நிகழ்ச்சிகளே கோயில்கள் எழுப்புவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. ஒரு கோயிலை பல மன்னர்கள் கட்டியிருக்கிறார்கள். அதற்கு உதாரணம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில். ஒரு கோயிலை ஒரே மன்ன்ன் தனது கடுமையான உழைப்பினாலும் கட்டியிருக்கிறார். அதற்கு உதாரணம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்.

செங்கண்ணன் என்ற சோழ மன்னன் ஒருவனே கிட்டத்தட்ட 75 சிவன் கோயில்கள் கட்டியுள்ளதாக வரலாறு கூறுகிறது. அரசர்கள் மட்டுமல்லாமல், சித்தர்களும் கோயில்கள் கட்டியிருக்கின்றனர். அதற்கு உதாரணம், பழநி முருகன் கோயில். இந்தக் கோயிலை போகர் என்ற சித்தரும், திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை கொங்கணர் என்ற சித்தரும் கட்டியுள்ளனர். ஆனால், அந்தக் கோயில்கள் எல்லாம் நீண்ட காலத்திற்குப் பிறகு தான் கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தாண்டிக்குடி வந்து முருகனை தரிசித்து, பிரார்த்தனை செய்வதன் மூலமாக முருகப் பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு பங்குனி உத்திரத் தினத்தன்று காவடிச் தூக்கிச் சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர். பழனிக்கே முருகப் பெருமான் இங்கிருந்து தான் சென்றிருக்கிறார். ஆகையால், பழநிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசனம் செய்த பிறகு தான் பழநி முருகனை தரிசனம் செய்ய வேண்டும். அப்போது தான் அதற்குரிய பலன் கிடைக்கும்.

இங்கிருந்து பழநிக்கு தாண்டிக்குதித்துச் சென்று முருகப் பெருமானை பத்தொன்பது சித்தர் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் தாண்டிக்குடிக்கே பாலமுருகன் வடிவில் அழைத்து வந்து விட்டார்கள். அவர், மறுபடியும் முருகனை அழைத்து வந்ததற்கு அடையாளமாக தாண்டிக்குடி மலையில் 3 நாட்கள் தொடர்ந்து அனைவரும் பார்க்கும்படி ஜோதி தோன்றியது. இதனாலேயே இந்த மலை ஜோதி மலை என்று அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து 3 நாட்கள் அந்த இடத்தில் ஜோதி தெரிந்து முடிந்தவுடன் அந்த இடத்திற்கு சென்ற பார்த்தபோது, முருகப் பெருமான் மறுபடியும், தாண்டிக்குடிக்கு வந்துவிட்டதற்கு அறிகுறியாக திருவடிச்சுவடுகள் மண்ணில் பதிந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அந்தக் கல்லில் திருவடிச்சுவடு காணப்பட்டது.

மேலும், அதற்கு அடுத்தாற்போல உள்ள பாறையில் முருகனின் வாகனமான மயில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டிருப்பது போன்ற தோற்றமும் காணப்பட்டது. இந்தக் கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இந்தக் கோயிலிலிருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண் மேடு உள்ளது. இந்த மண்ணே கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த மண்ணே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

முருகப் பெருமான் தனது 6ஆவது படை வீடான பழமுதிர்ச் சோலையில் மலை வளம் கண்ட பிறகு தாண்டிக்குடிக்கு வருகிறார். முருகன் தாண்டிக்குடியில் இருக்கும் பொழுது தான் அகஸ்தியரின் சீடரான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதையறிந்த முருகப் பெருமான் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக கொள்வதற்குரியது என்று கருதி தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாக இந்த இடம் தாண்டிக்குதி என்று அழைக்கப்பட்டு நாளடைவில் தாண்டிக்குடி என்றானது.

பன்றிமலை சுவாமிகளின் வேண்டுகோளின்படி முருகப் பெருமான் கோயில் கட்டுவதற்கு தேவையான பொருள்களுக்கு அது தொடர்பான நபர்களது கனவில் தோன்றி அந்தப் பொருள்களை கொடுக்க கூறினார். தற்போது கோயிலில் உள்ள மூலவரது சிலை கூட ஸ்தபதி ஒருவரது கனவில் முருகனே சென்று கூறி அதன் மூலம் நிறுவப் பெற்று திருப்பணி வேலைகள் முருகப் பெருமானின் மேற்பார்வையிலேயே நடந்து முடிந்தது.

இதையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு மூலவரான முருகப் பெருமான் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பழநி முருகன் கோயிலில் உள்ள மூலவரது அமைப்பிலும் இந்தக் கோயிலிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.