சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

323

கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜை அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.

சரஸ்வதிஅவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா

பொருள்:

அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.