பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் 108 நாமாவளி!
- ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
- ஓம் அரங்கமா நகருளானே போற்றி
- ஓம் அற்புத லீலா போற்றி
- ஓம் அச்சுதனே போற்றி
- ஓம் அமரேறே போற்றி
- ஓம் அரவிந்த லோசனா போற்றி
- ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
- ஓம் ஆதி மூலமே போற்றி
- ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
- ஓம் ஆபத்சகாயனே போற்றி
- ஓம் ஆலிலை பாலகா போற்றி
- ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
- ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
- ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
- ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
- ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
- ஓம் இமையோர் தலைவா போற்றி
- ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
- ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
- ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
- ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
- ஓம் ஊழி முதல்வனே போற்றி
- ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
- ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
- ஓம் எண் குணத்தானே போற்றி
- ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
- ஓம் எழில் மிகுதேவா போற்றி
- ஓம் ஏழைப் பங்காளா போற்றி
- ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
- ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
- ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
- ஓம் கலியுக தெய்வமே போற்றி
- ஓம் கண்கண்ட தேவா போற்றி
- ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
- ஓம் கருட வாகனனே போற்றி
- ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
- ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
- ஓம் கமலக் கண்ணனே போற்றி
- ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
- ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
- ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
- ஓம் கிரிதர கோபாலனே போற்றி
- ஓம் கீதையின் நாயகனே போற்றி
- ஓம் குசேலர் நண்பனே போற்றி
- ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
- ஓம் கோபியர் தலைவனே போற்றி
- ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
- ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
- ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
- ஓம் கோகுல பாலகனே போற்றி
- ஓம் கோவிந்த ராஜனே போற்றி
- ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
- ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
- ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
- ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
- ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
- ஓம் சாந்த குணசீலனே போற்றி
- ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
- ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
- ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
- ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
- ஓம் திருமகள் மணாளனே போற்றி
- ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
- ஓம் துவாரகை மன்னனே போற்றி
- ஓம் தேவகி செல்வனே போற்றி
- ஓம் நந்த கோபாலனே போற்றி
- ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
- ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
- ஓம் நவநீத சோரனே போற்றி
- ஓம் நான்மறை பிரியனே போற்றி
- ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
- ஓம் பரந்தாமனே போற்றி
- ஓம் பக்த வத்சலனே போற்றி
- ஓம் பலராமர் சோதரனே போற்றி
- ஓம் பவள வாயனே போற்றி
- ஓம் பத்ம நாபனே போற்றி
- ஓம் பார்த்த சாரதியே போற்றி
- ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
- ஓம் பாண்டவர் துாதனே போற்றி
- ஓம் பாண்டு ரங்கனே போற்றி
- ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
- ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
- ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
- ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
- ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
- ஓம் புருஷோத்தமனே போற்றி
- ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
- ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
- ஓம் மதுசூதனனே போற்றி
- ஓம் மண்ணை உண்டவனே போற்றி
- ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
- ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
- ஓம் மாயா வினோதனே போற்றி
- ஓம் மீராவின் வாழ்வே போற்றி
- ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
- ஓம் முழுமதி வதனா போற்றி
- ஓம் யமுனைத் துறைவனே போற்றி
- ஓம் யசோதை செய்தவமே போற்றி
- ஓம் யதுகுலத் திலகமே போற்றி
- ஓம் ராதையின் நாயகனே போற்றி
- ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
- ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
- ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
- ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
- ஓம் வேதியர் வாழ்வே போற்றி
- ஓம் வேணு கோபாலனே போற்றி
- ஓம் வைகுண்ட வாசனே போற்றி
- ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி
- ஓம் க்லீம் கிருஷ்ணாய க்லீம்
ஸ்ரீ கிருஷ்ணனின் இந்த நாமாவளி யை நம்பிக்கையுடன் பாராயனம் செய்து வந்தால் நம் வாழ்வில் பதினாறு செல்வங்களையும் பெற பகவான் கிருஷ்ணர் அருள்புறிவார்.