ஆடி 01- அமாவாசை மற்றும் கால பைரவர் வழிபாடு!
ஆடி அமாவாசை மற்றும் மாத பிறப்பு நாளான இன்று ஸ்ரீ காலபைரவர் வழிபாடு
இன்று அமாவாசை ஆடி அமாவாசை திங்கட்கிழமை அன்று அருகில் உள்ள பைரவர் கோயிலில், பெரிய கோயிலில் பல தடை செய்வார்கள், எங்கே இருப்பினும் பைரவர் சக்தி அபரிமிதமானது இரவு 8 மணி முதல் 9 மணி வரை கொஞ்சம் குங்குமம் நல்ல சிவப்பு, 3 எலுமிச்சம்பழம் சூலத்தில் குத்த, ஒரு வில்லை கட்டி சூடம் நிலைப்படியில் வைத்து ஏற்ற, செவ்வரளி பூ கட்டிய பூ அல்லது உதிரி பூ உங்களால் இயன்ற அளவு, பின்பு 27 மிளகை ஒரு சிறு சிவப்பு த் துணியில் கட்டி பைரவருக்கு முன்னால் ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட இழந்த சொத்துக்கள், பொருட்கள் கண்டிப்பாக கிடைக்கும் இது பலர் வாழ்வில் நடைபெற்றது உண்மை மற்றும் எதை நினைத்து அர்ச்சனை செய்கிறோமோ அவை விரைவில் திரும்பக் கிடைக்கும்.
ஸ்ரீ பைரவருக்கு அந்திகாலம், அர்த்தஜாம பூஜை விசேஷமாகும். மாத பிறப்பு, சித்திரை மாதம் பரணி நட்சத்திரம், ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி ஸ்ரீ பைரவ ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் மதுரை ஸ்ரீ சொக்கநாதர் மக்களுக்கு படியளக்கும் நாளாகும்.
தை முதல் செவ்வாய், திருவாதிரை நட்சத்திரத்தில், திருகார்த்திகை கழிந்து 21ம் நாள் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் கூடுகின்ற நாள் , மற்றும் அமாவாசை திதி, அமாவாசை ஞாயிறு, செவ்வாய், வியாழன் சேரும் நாள், பௌர்ணமி திதி , பரணி நட்சத்திரம் , கார்த்திகை பௌர்ணமி , பௌர்ணமி திதியும் வெள்ளிக்கிழமையும் சேரும் நாள் , சனிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி நாள் பைரவருக்கு விசேஷமாகும், அன்றைய தினங்களில் பைரவருக்கு விரதம் இருப்பதும் விசேஷமே.
திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் பிரதோஷ காலங்களில் பால் மற்றும் பன்னீரால் அபிஷேகம் மற்றும் ருத்ராபிஷேகம் செய்து, பால் பாயாசம், தேன் வடை , இனிப்பு பலகாரங்களுடன் வில்வம், தும்பைப்பூ, வெள்ளை தாமரை கொண்டு புஷ்ப அலங்காரம் செய்து பெயர் நாம அர்ச்சனை செய்து வழிபட்டால் பூமி, வண்டி, வாகன சுகம், மனைவியால் பொருள் வரவு, அஷ்டம ஐஸ்வர்யங்களும் வந்தடையும்.
குழந்தைகளுக்கு கல்வி ஞானம் விருத்தி அடைய, தொழில் , மனோபலம் அதிகரிக்க பைரவ மூர்த்திக்கு புதன் கிழமைகளில் முந்திரி பருப்பு மாலையுடன் பைரவாஷ்டகம் சொல்லவேண்டும். சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் பைரவருக்கு திருநீறு அபிஷேகம் செய்து வழிபட ஆயுள் விருத்தியாகும், எம பயம் நீங்கும்.
இழந்த சொத்துக்கள் திரும்பப் பெற :27 மிளகை ஒரு சிறு சிவப்பு த் துணியில் கட்டி பைரவருக்கு முன்னால் ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட இழந்த சொத்துக்கள், பொருட்கள் கண்டிப்பாக கிடைக்கும் இது பலர் வாழ்வில் நடைபெற்றது உண்மை இழந்த சொத்துக்கள், பொருட்கள்
மற்றும் எதை நினைத்து அர்ச்சனை செய்கிறோமோ அவை விரைவில் திரும்பக் கிடைக்கும்.
