நரசிம்மரை வழிபட கிடைக்கும் நன்மைகள்!
- நரசிம்மரை வழிபட வழிபட எதிரிகளை வெல்லக் கூடிய பலம் கிடைக்கும்.
- 108 திவ்ய தேசங்களில் சிங்கவேள்குன்றம் என்பதும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள பதிகங்கள், பாசுரங்கள் என்று அனைத்திலும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
- நரசிம்மருக்கு சிங்கபிரான், நரசிங்கம், அரிமுத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆளனரி என்று பல பெயர்கள் உண்டு.
- திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
- நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
- நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
- நரசிம்மனின் தேஜஸ், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
- இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை ஏழு உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
- மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
- பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
- நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
- நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
- வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்குச் செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
- மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
- நரசிம்மரை வழிபடும் போது “நரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தைகளையும் கற்ற பலன் உண்டாகும்.
- “அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
- நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.
- எல்லாவற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ‘ம்ருத்யுவேஸ்வாஹா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
- மங்களகிரி கோயிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
- யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோயில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோயில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோயில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்திதான் மூலவர்.
- திருமாலின் 10 அவதாங்களில் பரசுராமன் மற்றும் பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதன் காரணமாக அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் வணங்கப்படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை வணங்குகிறார்கள்.
- நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
- இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்து அவரை சமாதானப்படுத்தினார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
- சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
- சிங்கப் பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சந்நதிகள் குகைக் கோவில்களாக உள்ளன.
- ஆந்திர மங்களகிரி நாம் கொடுக்கும் பானக நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக்கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
- சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், லட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
- நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் மரபு.
- எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் வழிபடலாம்.
