Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalபுதன் பகவான் கர்மா கணக்காளர்

புதன் பகவான் கர்மா கணக்காளர்

நமது பிறப்புக்கு உண்டான கர்மாவை தசை வாரியாக பிரித்து இது நடக்க வேண்டும் இது நடக்க கூடாது என்று கச்சிதமாக எழுதி வைக்கும் பொறுப்பு புதனுக்கு உண்டு,,,
சூரியன் நமது ஆத்மா ,,
, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் கிரகம்,,
நமது ஆத்மாவை நோட்டம் இட்டு கணக்கை எழுதி கொண்டே இருப்பார்,,,
சூரியன் புதன் இணைவு கூட புத ஆதித்யா யோகம் எனப்படுகிறது,, இது நல்ல கணித வளம் கொடுக்கும் என்ற பலன் ஆகும்,,(, புதன் கணக்காளர் தானே )
புதன் கிரக தெய்வம் விஸ்ணு ஆவார்,,
விஸ்னுவின் கண்ணீர் துளிகள் மூலம் உருவான வள்ளி தெய்வானை என்ற இரு பெண்கள் அவர்களை முருகன் தன் வசம் ஆக்கி கொண்டார் என்று வேத வியாசர் மச்ச புராணம் ஒன்றில் கூறி இருக்கிறார்,,ஜோதிடத்தில் கூட புதனுகும் செவ்வாய்கும் பகை தான்,,
விஸ்னுக்கு கவுமெதகி ,,பத்மா என்ற இரண்டு மனைவி உள்ளது என்று மச்ச புராணம் கூறுகிறது, ஆனால் லட்சுமி, கங்கா, பூமாதேவி, என்ற 3 மனைவிகள் உள்ளது வடநூல் சாஸ்திர பிரியர்கள் கூறுகிறார்கள், எது எப்படியோ இரண்டாம் தாரம் மூன்றாம் தாரம் பற்றி அறிவதற்கு புதனைதான் ஜோதிடத்தில் ஆராய்வோம்,,
பார்வதியின் அண்ணன் விஸ்ணு,, முருகனுக்கு தாய் மாமன்,, தாய்மாமன் காரஹகும் புதன் ஆவார்,, ஜாதகத்தில் தாய்மாமன் நிலை ஆராய புதனை தொடுவோம்,
புதன் (விஸ்ணு) சயன கோலத்தில் படுத்து இருப்பது ஆதிசேஷன் எனும் பாம்பு,, இந்த பாம்பு கேது பகவான் தான்,, ASHLESHA நட்சத்திரம் புதனின் நட்சத்திரம் என்பதும் குறிப்பிட தக்கது,, ஆதிசேஷ நட்சத்திரம் ASHLESHA ஆகி போனது,, ஆயில்யம் பெயர் அர்த்தம் ஆய்வு செய்தால் தெரியும்,,, என நம்புகிறேன்,,,
புதனின் தொப்புள் கொடி இல் இருந்து உருவான தாமரை மலரில் அமர்ந்து இருந்து பிரம்மா (குரு)உயிர்களை படைத்து கொண்டு இருக்கிறார்,,,((குரு புத்ர காரகன்)) யார் பிறவி எடுக்க வேண்டும் என்ற செய்தியே விஸ்னுவின் தொப்புள் கொடியில் இருந்து பிரம்மாவுக்கு சென்று அதன் படியே உயிரை பிறக்க செய்கிறார்,,,,,
புதன் கேது இணைவு மற்றும் இந்த சேர்க்கைக்கு குரு தொடர்பு இருப்பின் ஜோதிடர் ,, ஜோதிட ஞானம், ஜோதிட ஆர்வலர்,, என்பர்,,
விஸ்ணு (புதன்) கேது எனும் ஆதிசேஷன் பாம்பில் அமர்ந்து இருக்கிறார்,, தொப்புளில் தாமரை இல் அமர்ந்த பிரம்மா (குரு) இருக்கிறார்,,
புதன் கேது குரு இந்த தொடர்பு பிறர் ஜாதகத்தை ஆராய பயன்படுகிறது அல்லவா,, பிறரின் கர்மா கணக்கை ஆராய்ந்து சொல்வதே ஜோதிடம்
இந்த தொப்புள் கொடி தாமரை தான் விஷ்ணுவுக்கு பிடித்த மலர்,,, விஸ்நுக்கு இந்த மலரை கொண்டு பூஜை செய்ய கர்மா கணக்கு குறையும்,, அது போக தாமரை தண்டில் இருந்து எடுக்கப்பட்ட திரியில் பசு நெய்யில் விட்டு தீபம் இட முன் ஜென்ம மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் குறையும் புதன் கர்மாவை எழுதும் கணக்காளர் அவருக்கு பிடித்ததை செய்தால் நமது வினைகளை கர்மா கணக்கை குறைப் பார் தானே,,
சமீபத்தில் தாமரை திரி இட்டால் முன் ஜென்ம பாவம் குறையும் என்ற ஆன்மீக தகவல் கிடைத்தது,,, அதன் ஆய்வே இந்த பதிவு,,
ஓம் நமோ பகவதே வாசு தேவாய நமக

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + thirteen =

Most Popular