குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி அருகிலுள்ள திருநெல்லிக்கா என்னுமிடத்தில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் மங்கலநாயகியுடன் நெல்லிவனேஸ்வரர் (நெல்லிவனநாதர், ஆம்லகேஸ்ரர்) என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
இவரை கோபம் உள்ளவர்கள் வணங்கினால் கோபம் குறையும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், குஷ்டரோகம் நீங்கும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை. பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தியும் கோவில் திருப்பணிக்கு பொருள் உதவி செய்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
இத்தல இறைவன் சுயம்புவாக உள்ளார் மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஒரு வாரகாலத்திற்கு மாலை வேலையில் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 181 தோவராத்தலமாகும். இத்தல இறைவனை பிரம்மா விஷ்னு சூரியன் சந்திரன் சனி கந்தர்வன் தேவலோக மரங்களாக வழிப்பாடு செய்துள்ளனர்.
எனவே கோபத்தை விட வேண்டும். உடனே விடமுடியவில்லை எனினும், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் இன்று யோகா, தியானப் பயிற்சிகள் வாயிலாக கோபத்தைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்.
நெல்லியின் மகிமை
முரட்டுக் குணம், முன்கோபம் போன்றவை இருப்பின் அதனைப் பரணிதோஷம் என்பார்கள். நெல்லி மரம் பரணி நட்சத்திரத்தின் நல்ல மின்காந்த கதிர் வீச்சுகளை உள்வாங்கி சேமித்து வைத்து, குளிர்ச்சியைத் தரும். நெல்லி இலையும், காயும் குளிர்ச்சிப் பொருள் என்பதால், அதனை அரைத்து தலைக்கு தேய்த்துக் கொண்டால் கண்களும், உடலும் குளுமை பெறும்.
ஆம்லவனநாதர்
இந்த நெல்லி மரத்தை தல விருட்சமாக கொண்டு விளங்கும் ஆலயம் உள்ள திருத்தலம் தான் திருநெல்லிக்கா ஆகும். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் நாமம் நெல்லி வனநாதர் என்பதாகும். வடமொழியில் ஆம்லவனநாதர் (ஆம்லா என்றால் நெல்லி) என்று வழங்கப்படுகிறார். திருவானைக்கா, திருக்கோலக்கா, திருக்கோடிக்கா, திருக்குரங்குக்கா போல, இத்தலமான திரு நெல்லிக்காவும் சிறப்பு பெற்றது.
மேற்கு நோக்கி எழுந்து நிற்கும் ஐந்துநிலை ராஜகோபுரத்தின் முன்பே, வெளியில் கொடிமரமும், நந்தி மண்டபமும் இருப்பது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. உள்ளே சுயம்பு மூர்த்தியான மூலவர் நெல்லிவனநாதரும், மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.
சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் வானவியல் அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ் கிறது. தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை மங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள்.
மங்கள நாயகி:
திருவாரூரை ஆண்டு வந்த உத்தம சோழனும், அவனுடைய மனைவியும் சிறந்த சிவ பக்தர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் திருவாரூர் சிவபெருமானை உருகி வேண்டினர். அப்போது மன்னன் மடியில் மூன்று வயதுச் சிறுமி வந்து அமர்ந்தாள். ‘உமக்கு மங்களம் வழங்க, பராசக்தியே மகளாக வந்துள்ளாள். அவளுக்கு ‘மங்கள நாயகி’ என்று பெயரிட்டு அழைத்து வா’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.
மன்னன் மகளாக மாறிய மங்கள நாயகி வளர்ந்து பெரியவள் ஆனாள். அப்போது ஆரூர் ஆலயத்தில் மங்கள நாயகி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, ‘ஆவணி முதல் வெள்ளிக்கிழமையன்று திருநெல்லிக்காவில் உம்மை மணமுடிப்போம்’ என்ற வாக்கு, ஈசனின் கருவறையில் இருந்து ஒலித்தது. அதன்படியே திருநெல்லிக்காவில் தெய்வத் திருமணம் நடைபெற்றது.
எனவே இந்தத் திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடை நீக்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் தல விருட்சமான நெல்லி மரமும், அதன் அருகே சிறிய கோவிலில் சிவலிங்கமும் இருப்பது ஆலயத்தின் சிறப்பை உயர்த்துவதாக உள்ளது.
முனிவர் கோபம் குறைந்த முனிவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தவர்கள். பிறருக்கும் உபதேசித்தவர்கள். அவர் களில் ஒருவரான துர்வாச முனிவருக்கு, எதற்கெடுத்தாலும் கோபம் பொங்கி வந்து விடும். உடனடியாக சாபம் கொடுத்து விடுவார். அப்படிப்பட்ட துர்வாச முனிவர், இந்த தலத்தில் கோபம் குறைந்து சாந்தமானார்.
