ஸ்ரீராம க்ருʼத ஸ்ரீக³ங்கா³ ஸ்துதி:
|| ஸ்ரீக³ங்கா³ ஸ்துதி: – ப்³ரஹ்ம புராணம் ||
ஸ்ரீராம உவாச –
அஸ்யா: ப்ரபா⁴வாத்³த⁴ரயோ யா(அ)ஸௌ மம பிதா ப்ரபு⁴: |
ஸர்வ பாப வினிர்முக்தஸ் ததோ யாதஸ் த்ரிவிஷ்டபம் || 1||
இயம்ʼ ஜனித்ரீ ஸகலஸ்ய ஜந்தோர் – பு⁴க்திப்ரதா³ முக்திமதா²பி த³த்³யாத் |
பாபானி ஹன்யாத³பி தா³ருணானி – கா(அ)ந்யா(அ)நயா(அ)ஸ்த்யத்ர நதீ³ ஸமானா ||2||
ஹதானி ஸ²ஸ்²வத்³ து³ரிதானி சைவ – அஸ்யா: ப்ரபா⁴வாத³ரய: ஸகா²ய: |
விபீ⁴ஷணோ மைத்ரமுபைதி நித்யம்ʼ – ஸீதா ச லப்³தா⁴ ஹனுமாம்ʼஸ்² ச ப³ந்து⁴: ||3||
லங்கா ச ப⁴க்³னா ஸக³ணம்ʼ ஹி ரக்ஷோ – ஹதம்ʼ ஹி யஸ்யா: பரிஸேவனேன |
யாம்ʼ கௌ³தமோ தே³வவரம்ʼ ப்ரபூஜ்ய – ஸி²வம்ʼ ஸ²ரண்ஃயம்ʼ ஸஜடாமவாப || 4||
ஸேயம்ʼ ஜனித்ரி ஸகலேப்ஸிதானாம்ʼ – அமங்க³லானாம்ʼ அபி ஸன்னிஹந்த்ரீ |
ஜக³த் பவித்ரீ கரணைகத³க்ஷா – த்³ருʼஷ்டா(அ)த்³ய ஸாக்ஷாத் ஸரிதாம்ʼ ஸவித்ரீ ||5||
காயேன வாசா மனஸா ஸதை³னாம்ʼ – வ்ரஜாமி க³ங்கா³ம்ʼ ஸ²ரணம்ʼ ஸ²ரண்யாம் ||6||
|| இதி ஸ்ரீப்³ராஹ்மே மஹாபுராணே தீர்த்த² மாஹாத்ம்யே கௌ³தமீ மாஹாத்ம்யே ஸ்ரீராம க்ருʼத ஸ்ரீக³ங்கா³ ஸ்துதி: ஸம்பூர்ணம் ||
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கிஷ்கிந்தா வாசத்தின் போது வானரர்களிடம் உபதேசித்த இந்த அரிதான ஸ்துதி ப்ரஹ்ம புராணம், பகுதி 157, தீர்த்த மஹாத்மிய அத்தியாயம், கவுதமி மஹாத்மியம் படலத்தில் உள்ளது. இந்த ஸ்துதி கங்கையின் மஹாத்மியத்தை விவரிப்பதோடு இல்லாமல் பிரார்த்தனையாகவும் அமைந்துள்ளது.
ஸ்ரீ ராமரால் அருளப்பட்ட இந்த கங்கா ஸ்துதி மிகவும் விசேஷமானது. கலியுகத்தில் நினைத்த மாத்திரத்திரத்தில் பாபங்களை அழித்து உய்விக்கும் திருநாமம் ஸ்ரீ ராம நாமம். ஆனால் ஸ்ரீ ராமனே கங்கையின் மஹாத்மியம் தன் திருநாமத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தது என உபதேசிக்கிறார்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கூறுவதாக –
” வானரர்களே ! இப்புண்ணிய நதியின் மகிமையால் என்னுடைய பிதாவான தசரத மஹாராஜா தன்னுடைய பாவங்களை எல்லாம் களைந்து சுவர்க்கலோகம் செல்ல முடிந்தது. கங்கா மாதா இவ்வுலகின் ஜீவராசிகளுக்கெல்லாம் அன்னை ஆவாள். பக்தர்களுக்கு புக்தியையும், முக்தியையும் அருளுக்கூடிய சக்தி வாய்ந்தவள். கொடிய குற்றத்தையும், பாவங்களையும் மன்னித்து அழித்து நற்கதி அளிப்பவள். புண்ணிய நதியான கங்கைக்கு ஈடு இப்புவியில் இல்லை. அன்னையின் கருணாகடாக்ஷம் நாம் மீண்டும் மீண்டும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் அழிக்கும், எதிரிகளை நமது நண்பர்களாக்கும். விபீஷணனின் நட்பு கிடைத்தது கங்கா மாதாவின் அருளாசியினால் தான். சீதையை மீட்டது, ஹனுமானின் உதவி கிட்டியது, லங்கை மற்றும் அரக்கர்களின் அழிவு அனைத்தும் அன்னையின் மகிமையினால் தான். கங்கா மாதாவை இடைவிடாது துதித்து ஸ்ரீ கௌதமர் மஹா முனிவரானார். கயிலை வாழ் சிவபெருமான் அன்னையை துதித்து தன்னுடைய ஜடாமுடியில் வசிக்கும் பேறு பெற்றார். கங்கா மாதா தன்னை நம்பி நாடியவர்களின் கேடுகள் அனைத்தையும் நீக்கி மனோபீஷ்டங்களை பூர்த்தி செய்யும் ஆற்றல் பெற்றவள். அத்தகைய மகத்தான சக்தி வாய்ந்த அன்னையை தரிசனம் செய்வோம். நமது உடல், மனம், புக்தி, வாக்கு அனைத்தும் ஒரு சேர கங்கை அன்னையிடம் அபயம் நாடி அவள் புகழ் பாடுவோம்.
கங்கா மாதா கீ ஜெய் !
