Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalதிருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

திருவோணம்: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலர்மேல் மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்

27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலர்மேல் மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.

தல வரலாறு:

பிரம்மா தன் அகங்காரம் நீங்க, சத்தியவிரதம் எனப்படும் காஞ்சிபுரத்தில் அஸ்வமேத யாகம் செய்தார். அதில் புண்டரீக மகரிஷியும் கலந்து கொண்டார். யாகம் முடிந்ததும் நாராயண சதுர்வேதி மங்கலம் எனப்படும் இத்தலத்திற்கு வந்து, அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார்.

அங்கிருந்த ஆவுடையையும், அதின் மேலிருந்து லிங்கத்தையும் பார்த்து விட்டு பெருமாள் கோயில் இல்லை என்ற ஏமாற்றத்துடன் வெளியே வந்தார். அப்போது சிவன் ஒரு வயோதிகர் வேடத்தில் அங்கு வந்து, மகரிஷியின் மனக்குறையை அறிந்து, ரிஷியே நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான் என்றார்.

ஆனால் ரிஷி மறுத்தார். வயோதிகர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான் என்றார்.

அத்துடன், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன்.உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்,என்று அருளினார்.

புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் தானே பிரசன்னமாகி காட்சி தந்ததால், இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். திருவோண நட்சத்திர தலம்: சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள்.

இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இருப்பிடம்:

வேலூரிலிருந்து (20 கி.மீ) சென்னை செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இங்கு இரண்டு பெருமாள் கோயில் இருப்பதால் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =

Most Popular