Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalசிவன் அர்த்தநாரிஸ்வரர் ஆனது ஏன்?

சிவன் அர்த்தநாரிஸ்வரர் ஆனது ஏன்?

ஒரு முறை கயிலாயத்திற்க்கு சிவபெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர் தேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிவிட்டு போனார்.
இதை பார்த்து துணுக்குற்ற பார்வதிதேவி அடுத்தமுறை முனிவர் வந்தபொழுது இறைவனை விட்டு பிரியாமல் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டார். முனிவரோ ஒரு வண்டு வடிவம் எடுத்து இறைவனின் திருமுடியை மட்டும் சுற்றி வலம் வந்து வணங்கிவிட்டு போனார்.
முனிவரின் செய்கையால் வருத்தம் அடைந்த தேவி அந்த முனிவர் என்னை ஒதுக்கிவிட்டு தங்களை மட்டும் வலம் வந்து வணங்கி விட்டு போகிறார். நீங்களும் எதுவும் சொல்லாமல் இருக்கிறீர்களே உங்களை வணங்கிய பிருகு முனிவர் எம்மையும் வணங்காது அலட்சியப்படுத்தியது சரியா எனக்கேட்டார்.
உலக இன்பங்களை விரும்பி இருந்தால் உன்னையும் வணங்கி இருக்க கூடும். முனிவர் மோட்சத்தை மட்டுமே கருதி வந்ததால் என்னை மட்டுமே வணங்கி வழிபட்டிருப்பார் போலிருக்கிறது என்று பதில் அளித்தார் இறைவன்.
ஈசனின் சமாதானம் அன்னைக்கு ஏற்புடையதாக இல்லை. ஈசனை விட்டு தம்மை தனியாக பிரித்தது பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெற்று விட்டால் தம்மை பிரிக்க முடியாதல்லவா என்று நினைத்தார். தனது எண்ணம் ஈடேருவதற்காக தவம் மேற்கொள்ள நினைத்தார்.
பூவுலகில் திருமறை காட்டை (வேதாரண்யம் ) அடுத்து எட்டு திக்குகளிளும் சிவ ஸ்தலன்களால் சூழப்பட்ட எட்டி வனத்தை தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தார்.
வால்மீகி முனிவர் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருப்பதையும் புற்று அவரை மூடி கொண்டிருப்பதையும் கண்டார். முனிவரின் தவ வலிமையால் ஒரு காந்த சக்தி வனம் முழுவதும் பரவி இருப்பதை தேவி பார்த்தார். அந்த இடமே நாம் தவம் செய்ய உகந்த இடம் என்று உணர்ந்து வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு அருகிலேயே ஒரு எட்டி மரத்தின் கீழ் அமர்ந்தார் தேவி.
புற்றிலிருந்து வெளியேறிய முனிவர் ஆசிரமத்தின் அருகில் உமையம்மை தவக்கோலத்தில் வீற்றிருப்பதை பார்த்து அவரை வணங்கினார். இறைவன் திருமேனியில் இடம் பெறுவதற்காக தாம் தவம் செய்ய வந்திருப்பதாக தேவி கூறியபொழுது கேதாரீஸ்வரர் விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமானை திருப்தி செய்தால் வேண்டிய வரத்தை பெறலாம் என முனிவர் யோசனை கூறினார்.
வனத்தில் தேவி சிவலிங்க பிரதிஷ்டை செய்து புரட்டாசி மாதத்து மாதத்து வளர்பிறையில் இருந்து தொடங்கி ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி வரை விரதம் இருந்து சிவபெருமானை வழி பட்டு வந்தார். தேவியின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த இறைவன் தேவி வேண்டியபடி தமது திருமேனியில் இடப்பாகத்தை தேவிக்கு அளித்து விடுகிறார். . இறைவனும் இறைவியும் ஒன்று சேர்ந்த அந்த அந்த திருஉருவம் தான் அர்த்தநாரீஸ்வரர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 10 =

Most Popular