Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalபோக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்.

போக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்.

திருநாகேஸ்வரம் அருகில் உள்ள விஸ்வநாதஸ்வாமி கோவில் மிக புகழ்பெற்றது இந்த கோவிலை வணங்கினால் பிறப்பற்ற பெரு வாழ்வு உண்டாகுமாம்.
அதாவது மறு ஜென்மம் என்பதேகிடையாது என்பதுதான் இக்கோவில் சென்று வந்தால் நமக்கு ஏற்படக்கூடிய பலன் ஆகும்.

இந்த கோவில் சென்றால் பிறப்பற்ற பெருவாழ்வு உண்டாகுமாம்.மறுபிறவி கிடையாதாம். இருந்தாலும் இக்கோவில் செல்வது மிகவும் கடினம் என்பது பலரும் சொல்வதாக உள்ளது.பலமுறை முயற்சி செய்தால்தான் இக்கோவில் செல்ல முடியும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.

மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

மூலவரைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.
12 ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் சிவன் இத்தலத்திற்குஅழைத்துள்ளாராம். சிவபெருமானையே சனீஸ்வரர் பிடிக்க வந்து ஒரு கட்டத்தில் ஈஸ்வரனிடம் சரணாகதி அடைந்தாராம். இங்கு சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

12 ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களில் காசி விஸ்வநாதரும்,விசாலாட்சி
யும் மட்டும் இங்கே தங்கி விட்டனராம் அதனால் இவர்களின் பெயரால் இக்கோவில்அழைக்கப்படுகிறது.அகத்தியர் இவரை தரிசிக்க வந்தாராம் அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை வர விடாமல் சிவபெருமான் தடுக்க நினைத்து மகரந்த மகரிஷி என்ற முனிவரை அனுப்பினாராம் மகரந்த மகரிஷிமுனிவர்அகத்தியரை தடுக்க அகத்தியர் கோபமடைந்து யாழி{ சிங்க} முகமாக உள்ளவாறு மாற்றினாராம்.சிவபெருமானின் கட்டளைப்படிதான் உங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

கோபம்தணிந்த அகத்தியர், “”மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்”என்றுசொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.
உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார்.

இப்படியே ஐம்பது வருடங்கள் பூஜை செய்த நிலையில். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் விழுந்தது.

அப்போது இறைவன் ஜோதியாக காட்சி கொடுத்தாராம் இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக்காட்சிகொடுத்தார். அத்தோடு அவர் சாபமும் நீங்கியது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட கோவிலான தேப்பெருமாநல்லூர் கோவில்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 10 =

Most Popular