என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும். மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன் பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம். அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். – வள்ளலார்.
நாம் செய்யும் தானங்களும் அதன் பலன்களும்:
1. மஞ்சள் தானம் செய்தால் – மங்களம் உண்டாகும்.
2. பூமி தானம் செய்தால் – இகபரசுகங்கள்.
3. வஸ்த்ர தானம் (துணி) செய்தால் – சகல ரோக நிவர்த்தி.
4. கோ தானம் (பசுமாடு) செய்தால் – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
5. திலதானம் (எள்ளு) செய்தால் – பாப விமோசனம்.
6. குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி.
7. நெய் தானம் செய்தால் – வீடு பேறு அடையலாம் – தேவதா அனுக்ரஹம்.
8. வெள்ளி தானம் செய்தால் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
9. தேன் தானம் செய்தால் – சுகம் தரும் இனியகுரல்.
10. சொர்ண தானம் (தங்கம்) செய்தால் – கோடி புண்ணியம் உண்டாகும்.
11. தண்ணீர் தானம் செய்தால் – மன சாந்தி ஏற்படும்.
12. கம்பளி (போர்வை) தானம் செய்தால் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி.
13. பழவகைகள் தானம் செய்தால் – புத்ர பவுத்ர அபிவிருத்தி.
14. பால் தானம் செய்தால் – சவுபாக்கியம் உண்டாகும்.
15. சந்தனக்கட்டை தானம் செய்தால் – புகழ் உண்டாகும்
16. அன்னதானம் செய்தால் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
