நேற்றைய தொடர்ச்சி…
அந்த சமயத்தில்,ஷிர்டி மசூதியில் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தி ல் ஆழ்ந்தார்கள். திடீரென பாபா ஆவேசத்தோ டு எழுந்து நின்றார்.
ஏன் இவர் இப்படி ஆவேசப்படுகிறார் என்று பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபாதன் கைகளையும், கால்களையும் யாரோடோ சண்டையிடுவது போல் காற்றில் வீசத்தொடங்கினார்.
எதன்பொருட்டு இது நடக்கிறது? பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்து கொண்டு இருந்தார்கள். பாபா உக்கிரத்தோடு காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோவைப் பழமாய்ச்சிவந்திருந்தன. முகம் குங்குமப்பூப்போல் சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.
திருடர்கள் முன் பயத்தோடு நின்று கொண்டி ருந்த காஷிராமின் உடலில் ஒரு கணம் ஆவே சம் வந்தது போல் தோன்றியது. தன் கையில் பற்றிக் கொண்டிருந்த பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார். தன் கைகளா லும், கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமா கத் தாக்கத் தொடங்கினார்.
அவரோ அதிக பலமில்லாத நோஞ்சான். ஒரே ஒருவர் தான் அவர். திருடர்கள் பலசாலிகள். அவர்கள் எண்ணிக்கையில் நான்கைந்து பேர். ஆனால், காஷிராமின் உடலில் தென்பட்ட அசாத்தி யமான வலிமையைப் பார்த்து திருட ர்கள் விக்கித்துப் போனார்கள்.
கடுக்கன் சங்கிலி அனைத்தையும் அங்கேயே போட்டு விட்டு தப்பித்தால் போதும் என்று ஓட லானார்கள்! காஷிராம் விடுவதாக இல்லை. காற்றை விட வேகமாக ஓடி, அவர்கள் முன்னா ல் போய்மீண்டும் நின்றார். அவர்களை ஒரு கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு முக்கிய மாக நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு மசூதி நோக்கி நடக்கலானார். திருட ர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர் பிரமி ப்போடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர் மசூதியில் நுழைந்து பாபாவின் பாதங் களில் விழுந்து பணிந்தார். சர்க்கரை பையை அவரிடம் கொடுத்து சர்க்கரையை ஏற்குமாறு வேண்டினார். அப்போதுதான் பாபாவின் ஆவேசம் தணிந்தது.
அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரி டம் ஓப்படைத்து விட்டாயல்லவா? என்று அமை தியாக, என கேட்டபோதுதான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது. பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார் அவர்.
தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எப்படி யெல்லாம் ஓடோடி வருகிறார் என்றறிந்து நெக்குருகி நின்றார்கள் பக்தர்கள்.
அவரவரும் அவரவர் உடம்பை நன்கு பராமரி க்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம். அடியவர்கள், தீய பழக்கங்கள் அற்றவர்களாய், நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம் என்பதை பாபா அடிக்கடி அறிவுறுத்தினார்.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே! என்ற திருமூலர் தத்துவமே, பாபாவின் உபதே சமாகவும் இருந்தது. உடம்பைப் புறக்கணிக்க வும் வேண்டாம். கொஞ்சிக் கொஞ்சி செல்ல மாகக் கொண்டாடவும் வேண்டாம். ஆனால், முறையாக அதைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
உடல் என்கிற குதிரையில் தான் ஆன்மா சவாரி செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆன்மா சவாரி செய்யும் இந்த உடல் நலமாக இருக்க வேண்டி யது அவசியம். குதிரையில் சவாரி செய்யும் பயணி, குதிரையின் நலனைஎவ்வளவு எச்சரிக்கையோடுபாதுகாப்பானோ, அதுபோல் நாமும் உடலைக் காக்கவேண்டும்.
கடவுளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத் தை சாத்தியப்படுத்தவே உடல் அருள ப்பட்டுள்ளது. ஆன்ம ஞானம் பெறுவதற்கு உடலின் ஆரோக்கியம் முக்கியமானது. பாபா, உடலை வருத்திக் கொண்டு பக்தி செய்யுமா று கூறியதில்லை. அன்பர்களைத் தாயன்போ டு நேசித்த அவர், அவர்களது உடல் நலனிலும் தாய்மை கனிவோடு அக்கறை செலுத்தினார்.
அதுமட்டுமல்ல, எல்லாஜீவராசிகளிலும் பாபா வே குடிபகொண்டிருப்பதை அறிந்து, ஜீவகாரு ண்யத்தோடு வாழவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஷிர்டியில் ஒருவீட்டில் தங்கியிருந்தார். ஒரு முறை, அவர் மதிய உணவு தயார் செய்து கொ ண்டிருந்தார். கரண்டியால் ரசத்தை அவர்கல க்கிக் கொண்டிருந்த போது,பசியுள்ள ஒரு நாய் விடாமல் குரைக்கத் தொடங்கியது.
நாய்பசியால் தான் குரைக்கிறதுஎன்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்து கொண்டு வாசலுக்குவந்தார். காய்ந்த ரொட்டித்துண்டை பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது.
தன் பசி தீர அதை உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்தது. ஷிர்டி பாபா வின் கண்கள் ஒளியால் மின்னுவதைப் போல் அதன் கண்களும் பளபளவென மின்னிக்கொ ண்டிருந்தன. நாய் உண்பதைப் பார்த்து நிறை வடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவைப் பார்ப்பதற்காக மசூதிக்குச் சென்றார்.
தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானா ர். அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள். இப்படியே தொடர்ந்துநடப்பாயாக. என் பசிக்கு உணவிட மறந்துவிடாதே.
தர்கட்டுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாபாவு க்கு அவள் இன்று உணவிடவேஇல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம் கேட்டாள்: சுவாமி! நான் இன்றுஉங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே? நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டி யை நான் தானே அம்மா சாப்பிட்டேன்?
நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்துபோனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான்தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்குஉணவளித்தாலும், அதுஎன்னையே வந்து சேரும்.
நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்து விட்டது. இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். எங்கும் நிறை ஞானப் பிரம்மத்தி ன் முன் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டார். ஷிர்டியில் நானாவலி என்கிற பாபா பக்தன் இருந்தான்.
பாபாவுக்கான தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வான் அவன். திடீரென்று ஒருநாள் பக்தர்கள் கூடியிருக்கும் சந்தர்ப்பத் தில் நேரே பாபாவிடம் வந்தான். இப்போது உங்கள் ஆசனத்தில் நான் அமரவேண்டும். உடனே எழுந்திருங்கள். என்று பாபாவை அதட்டினான். பக்தர்கள்திகைப்போடு பாபா வைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்…
நாளை பாகம் 15 தொடரும்…
ஷிர்டி சாய் பாபா பகுதி -14
RELATED ARTICLES
