Saturday, October 28, 2023
HomePurana Kathaigalவராஹ புராணம் - பகுதி 20 வெட்ராசுரனும் காயத்திரியும்

வராஹ புராணம் – பகுதி 20 வெட்ராசுரனும் காயத்திரியும்

(வராக புராணத்தில் மட்டுமே உள்ளது இக்கதை)

வெட்ராசுரனின் தந்தை விருத்திரன் முற்பிறவியில் கடல் நுரையால் இந்திரனால் கொல்லப்பட்டான். மறுபிறவியில் விருத்திரன் முற்பிறவியில் நடந்ததை அறியலானான். எனவே அவன் இந்திரனைக் கொல்ல ஒரு மனிதனை வேண்டினான். வேட்ரவதி ஆறு ஒரு பெண்வடிவில் விருத்திரனை மணந்து வெட்ராசுரனைப் பெற்றாள். அவன் தேவர்களுக்குப் பரம விரோதி ஆனான். பிரக்ஜோதிஷ்புர மன்னனாகி உலகை எல்லாம் வெற்றி கொண்டனான். வெட்ராசுரன் மற்றவர் கண்களுக்குப் புலப்படாதவன். எனவே தேவர்கள் சிவனிடம் முறையிட அவர் பிரம்மாவிடம் அழைத்துச் சென்றார். அப்போது பிரம்மா கங்கைக் கரையில் அமர்ந்து காயத்திரி மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பிரம்மாவுக்கு தெரியவில்லை. காயத்திரி மந்திரத்தின் அதிதேவதையான காயத்ரிதேவி திடீரென்று அங்கு தோன்றினாள். அத்தேவிக்கு எட்டு கரங்களில், வெவ்வேறு ஆயுதங்கள் இருந்தன. வெள்ளைக் கலை உடுத்தி இருந்தாள். அவள் பல ஆண்டுகாலம் வெட்ராசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றாள். சிவன் அவளைப் புகழ்ந்து துதி பாடினார். இமயமலையில் காயத்திரிக்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்தார் பிரம்மா.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + seventeen =

Most Popular