குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள்.
நாம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பலவகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன. காயத்ரிமந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரம். கேட்டதைத் தரும் சிந்தாமணி என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து செல்வம் செழிக்க அருள்புரிவார்.
குபேர சிந்தாமணி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம்
உனபதுமாம் தேவஸக |
கீர்த்திஸ்ச மணினா ஸக:
ப்ராதுர் பூதேஸ்மி ||
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்
வருத்திம் ததாதுமே |||
ஓம் குபேராய ஐஸ்வர்யாய
தனதான்யாதிபதயே
தன விருத்திம்
குருகுரு ஸ்வாஹா! ||||
அதிகாலையில் ஜெபம் செய்து வர வீட்டிலும், தொழிலிலும், செல்வம் சேரும்