Sunday, October 15, 2023
HomeSlogamமஹாலக்ஷ்மிதேவியின் அருளைப் பெற

மஹாலக்ஷ்மிதேவியின் அருளைப் பெற

கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள்.

உங்கள் இல்லத்தில் மஹாலக்ஷ்மி மனமாரக் குடிகொண்டு அருள்வாள்.

தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது.

இதோ, அந்த அற்புத ஸ்லோகம். பாராயணம் செய்யுங்களேன்…

‘ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்
சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்”

கருத்து:

ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும்,
சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும்,
தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும்,
ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும்,
உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்,
தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும்,
பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் பூஜிக்கிறேன்.

ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.

அலைமகள் சரணம் !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 6 =

Most Popular