பாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ
மைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ
குழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ
சிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ
பூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்
ஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா
இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா
அடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்
குப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே
கொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும் [270]
கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே
மாரியென்றால் மழைபொழியும்
தேவியென்றால் தேன்சொரியும்
தேவியென்றால் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே
திரிபுர சுந்தரியே தேசத்து மாரியம்மா
பொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே
தாயாரே பெற்றவளே சத்தகன்னி சுந்தரியே
பேரு மறியேனம்மா பெற்றவளே தாயாரே
குருடன்கைக் கோலென்று கொம்பனையே நீயறிவாய்
கோலைப் பிடுங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானோ [280]
