பிரத்யங்கிரா தேவி மந்திரம்!
நவ சக்திகளின் அருளை ஒருசேர பெற உதவும் பிரத்யங்கிரா தேவி மந்திரம்
இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த நரசிம்மர் அவனுடைய ரத்தத்தை பருகியதால் கடுமையான உக்கிரம் கொண்டார். நரசிம்மரின் உக்கிரத்தை குறைத்து சாந்தமடைய செய்ய சிவபெருமானின் அம்சமான சரபரிடம் இருந்து தோன்றியவர் தான் பிரத்யங்கிரா தேவி என்று புராண கதைகள் கூறுகின்றனர்.
பல சிறப்புக்கள் உடைய பிரத்யங்கிரா தேவியை எவர் ஒருவர் வழிபட்டு கீழே உள்ள மந்திரம் அதை ஜெபிக்கிறார்களோ அவருக்கு நவ சக்திகளின் அருள் கிடைக்கும் அதோடு எதிரிகள் அழிவர், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
பிரத்யங்கிரா தேவி மந்திரம்:
ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தீ நோரயா: க்ரூராம் க்ரித்யாம் வதூமிவா தாம் ப்ரம்மணா அபநிர்ன்னுதமா: ப்ரத்யக் கர்த்தாரம் ருச்சது ஹ்ரீம் ஓம்.
இந்த மந்திரத்தின் ரிஷி: நாரதர்
சந்தஸ்: அனுஷ்டுப்
தேவதை:மஹா பிரத்யங்கிரா தேவி.
நவசக்திகள் என்று சொல்லக்கூடிய பூமி சக்தி, ஜல சக்தி, அக்னி சக்தி, காற்று அல்லது உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, அமிர்த சக்தி, சூரிய சக்தி, பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் சக்தி, மோட்சம் அருளும் சக்தி ஆகிய சக்திகளின் ரூபமாக விளங்குகிறார் பிரத்யங்கிரா தேவி.
உடல், மன தூய்மையோடு தினமும் பிரத்யங்கிரா தேவியை வணங்கி மேலே உள்ள மந்திரத்தை 9 முறை கூறி வர நவ சக்திகளின் பரிபூரண அருளை பெற்று பெரு வாழ்வு வாழலாம். புராண காலத்தில் “நரசிம்ம அவதாரம்” எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்பும் தனது உக்கிரம் அடங்காமல் இருந்தார் நரசிம்மராக இருந்த மகாவிஷ்ணு. இதனால் பயந்த தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று முறையிட, அவர் “சரபேஸ்வரர்” என்ற மிகப்பெரும் பறவை வடிவெடுத்து, நரசிம்மரின் கோபக்கனல் இந்த உலகை அழிக்காமல் பாதுகாத்தார்.
அப்போது நரசிம்மரிடம் இருந்து தோன்றிய “கண்டபேருண்ட” என்ற இரு தலை பறவைக்கும், சரபேஸ்வரருக்கும் பயங்கர சண்டை மூண்டது. இதனால் உலகமே அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது இந்த உலகை அழிவிலிருந்து காக்க சிவபெருமானின் மனைவியாகிய ஆதிபராசக்தி, தனது அம்சமாக “ஆண் சிங்கத்தின் தலையும், பெண் மனித உடலும்” கொண்ட “பிரத்யங்கரா தேவி” என்ற சக்தி வாய்ந்த பெண் தெய்வத்தை உருவாக்கி அனுப்பினாள்.
சரபேஸ்வரர், கண்டபேருண்டம் இடையேயான சண்டையை நிறுத்த பிரத்யங்கரா தேவி எழுப்பிய கர்ஜனை அண்ட சராசரங்களையும் அதிர வைத்து, அந்த சண்டையையும் நிறுத்தியது. இத்தகைய சக்தி வாய்ந்த பிரத்யங்கரா தேவியை நாம் வணங்குவதால், நமக்கு தீமை செய்யும் சக்திகளிடமிருந்து அந்த தேவி காப்பாள்
