ஏழாம் ஆவரணம்
ராகம்: சரஸ்வதி
தாளம்: ரூபகம்
பல்லவி
அகிலாண்டேஸ்வரி வாணி ரமா ஸேவிதே
அஷ்டகோணஸ்திதே த்ரிபுரஸித்தாதி பூஜிதே
அனுபல்லவி
வசின்யாதி வாக்தேவதா வந்தித மனோலாஸினி
மத்யம கால சாஹித்யம்
ஸர்வரோகஹர சக்ரவாஸினி ரஹஸ்ய யோகினி
சரணம்
வித்யா அவித்யா ஸ்வரூபிணி
சிதானந்த ப்ரகாசினி
புத க்ரஹ ப்ரீத்யர்த்தே
மரகத மணி கர வலயே
அர்த்தம்:
சரஸ்வதியும், லக்ஷ்மியும் வணங்கும் அகிலாண்டேஸ்வரி, அஷ்டகோணம் எனப்படும், எட்டு முக்கோணங்களாலான ஆவர்ணத்தில் இருக்கிறாள். திரிபுரஸித்தா பூஜிக்கிறாள்.
வசினி முதலிய எட்டு வாக்தேவதைகள் இங்கு இருந்து வழிபாடு செய்கிறார்கள். அதனால் மனம் மகிழ்கிறாள். ஸர்வரோகஹர சக்ரத்தில் வசிக்கிறாள். ரஹஸ்ய யோகினிகள் அன்னையை இங்கு வணங்குகிறார்கள்.
அறிவுள்ள அஜடமாகவும், அறிவற்ற ஜடமாகவும் இருப்பவள் அம்பாள். தூய்மையான ஆனந்தத்தினால் ப்ரகசிப்பவள். புதனின் அருள் கிடைக்கச்செய்பவள். மரகதத்தினால் ஆன வளையல்களை கரத்தில் அணிந்திருப்பவள்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
