சிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனுக்கு உகந்த காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமுல் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வீரபத்ரர் அருளை பெறலாம்.
சிவபெருமானின் திருவுருவான வீரபத்ரனும் அன்னையால் உருவான பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை அழித்த விதம் புராணங்களில் இலக்கியங்களில் உள்ளன. வீரபத்திரன் ஆலயங்கள் அநேகமாக வடக்கு நோக்கியே உள்ளன. மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும் இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் தலையின் முன் உச்சியில் சிவலிங்கம் காணப்படுகிறது.
ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரீ
ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷாய தீமஹி
தந்நோ வீரபத்திரஹ் ப்ரசோதயாத்.
