சஷ்டி விரதம் நன்மைகள்!
மாதாமாதம் வரும் இந்த நாளில் வீட்டி லேயே எளிய விரதத்தை மேற்கொண்டால் மனதில் நினைத்த விஷயங்கள் அப்படியே நடக்கும்.
முருகனுக்கு உகந்த சஷ்டி திதி மிகவும் விசேஷமானது.
வளர்பிறை சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் மாதாமாதம் வரும் சஷ்டி தினமன்று வீட்டிலும், கோவிலிலும் பூஜைகள் செய்பவர்கள் தங்களு டைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள்.
குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக் கு சஷ்டி விரதம் இருந்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்கின்ற நம்பிக்கை யும் பக்தர்களிடையே உண்டு. சஷ்டி விரதம் குழந்தை வரம் மட்டுமல்ல கேட்கும் வரங்கள் அத்தனையும் அளிக்கும் என்பது நம்பிக்கை மிகவும் எளிமையாக இருக்கும்.
முருகப்பெருமான் திருஉருவத்தை பார்க்கும் பொழுதே பக்தி பரவசம் நமக்குள் மேலோங்கும். மாதா மாதம் வரும் சஷ்டி தினமன்று முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
உணவேதும் அருந்தாமல் அந்த நாளில் விரதம் இருந்து முருகனை நினைத்து, பக்தி பாடல்களை பாடினால் கேட்ட வரம் கிடைக்கும்.
சஷ்டி நாளில் காலை முதல் மாலை வரை தண்ணீரைத் தவிர உணவு எதுவும் அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். காலை, மாலை இருவேளையும் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்வது உத்தமம்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.
தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கட்டாயம் வைக்க வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். பூஜையில் தேங்காய் உடைத்து இருபுறமும் வைக்க வேண்டும்.
முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு இஷ்ட நைவே த்தியமாக அவல் உணவுகள் வைக்கலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
எளிமையான முறையில் தீப, தூப, ஆராதனை காண்பித்து கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதே போல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. காலையில் அல்லது மாலையில் முருகன் கோவிலுக் கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு வாருங்கள். ஒவ்வொரு மாதமும் நாம் செய்து வர எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். சஷ்டி தினத்தில் வீட்டில் கந்த சஷ்டி கவசம் ஒலிப்பதும், அதனை நாம் வாசிப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். தீய சக்திகளை விரட்டி அடிக்கும்.
சுப காரியங்கள் கைகூடும். கன்னிப் பெண்கள் சஷ்டி விரதம் இருந்தால் நல்ல ஒரு மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். இதுவரை தெரியாதவர்கள் இனி இந்த விரதம் மேற்கொண்டு பயன்பெற்று முருகன் அருள் பெறலாம்.
