வீடு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது?
1.வீட்டு மனை சதுரம் மற்றும் செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும்.
2.வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பார்த்த மனைகளாக இருந்தால் நல்லது.
3.வடக்கு மற்றும் கிழக்கில் காலி இடம் அதிகம் விட்டு கட்டுவது நல்லது.
4.காம்பவுண்டு சுவரின் எந்த பகுதியிலும் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது.
5. வீட்டை சுற்றி வர வழி வேண்டும்.
6. எந்த மூலையையும் வளர்க்கக் கூடாது.
7.சமையலறை தென்கிழக்கில் மட்டும் தான் வைக்க வேண்டும்.
8.தம்பதிகள் படுக்கும் அறை தென்மேற்கு திசையில் அல்லது தெற்கில் மட்டும் தான் வைக்க வேண்டும்.
9. போர்வெல், கிணறு ஆகியவற்றை வடகிழக்கில், வடக்கு அல்லது கிழக்கில் அமைக்கலாம்.
10. தென்மேற்கு மூலை சரியாய் 90 டிகிரிக்கு இருக்க வேண்டும்.
11. வடகிழக்கு பள்ளமாகவும் அதைவிட வாயு மூலை சற்று உயரமாகவும், வாயு மூலையை விட அக்னி மூலையை உயரமாகவும், அக்னி மூலையை விட தென்மேற்கு மூலை உயரமாகவும் இருக்கவேண்டும்.
12. வடகிழக்கில் பூஜை ரூம், கழிவறை, குளியலறை, செப்டிக் டேங்க் வரக்கூடாது.
13. நைருதி மூலையில் பூஜை அறை, கழிவறை, தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் கூடாது.
14. வாயு மூலையில் கன்னிப் பெண்கள் உபயோகிக்க தடைபட்ட திருமணம் சீக்கிரம் நடக்கும்.
15. தினசரி வரவு செலவை வாயு மூலையில் செய்யவேண்டும்.
16. திசைகாட்டிக்கு சரியாக வீட்டின் திசையை மாற்றக்கூடாது. தெருவை அனுசரித்துதான் வீடு கட்டவேண்டும்.
17. மழைநீர் சேகரிப்பு ஈசானியத்தில் வைத்து கொள்ளலாம்.
18. எக்காரணம் கொண்டும் எந்த கடவுளையும் தெற்கு நோக்கி வைத்து வழிபடக்கூடாது.
19. வீட்டின் தலை வாயிலுக்கு எதிரே எந்த கம்பமும், மரமும் இருக்கக்கூடாது.
20. தலைவாயில் பின்வாசல் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் நல்லது.
21. செப்டிக் டெங்க் வீட்டின் அஸ்திவாரத்துடன் இணையக்கூடாது.
22. செப்டிக் டெங்க் காம்பௌண்ட் சுவருடன் இணைக்கக்கூடாது.
23. தலைவாயில் கதவு திறந்து மூடும்போது கிரீச் போன்ற சத்தம் வரக்கூடாது.
24. படுக்கை அறையில் கண்ணாடி வைக்கக்கூடாது.
வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டிய திசையென்றால் அது,
- தென்கிழக்கு பகுதி
- வடமேற்கு பகுதி
- தெற்கு நடுப்பகுதி
- மேற்கு நடுப்பகுதி
இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே ஏராளமான நன்மைகள் வந்து சேரும்.
