Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamஅக்ஷய திருதியை ஸ்பெஷல்

அக்ஷய திருதியை ஸ்பெஷல்

கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம!

தேவிபாகவதம் 9வது ஸ்கந்தம் 42வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி துதியை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் செல்வ வளம் கொழிக்கும்.

நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம:
கிருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

தாமரைப் பூவில் வசிக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். ஸ்ரீ நாராயணன் மனைவியே நமஸ்காரம். ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிரியமானவளே நமஸ்காரம்.

பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:

தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களுடையவளும் தாமரை போன்ற முகமுடையவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். தாமரைப் பூவை ஆசனமாகக் கொண்டவளே, கையில் தாமரையைத் தரித்திருப்பவளே, விஷ்ணு பத்தினியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோ நம:
ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷதாத்ர்யை நமோ நம:

சகல சம்பத்துகளின் வடிவாக இருப்பவளும் அனைவராலும் ஆராதிக்கத் தகுந்தவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். விஷ்ணுவிடத்தில் எங்கள் பக்தியைக் கொண்டு சேர்ப்பவளும் சந்தோஷத்தை அளிப்பவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

கிருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச கிருஷ்ணேஸாயை நமோ நம:
சந்த்ரஸோபாஸ்வரூபாயை ரத்னபத்மே ச ஸோபனே

கிருஷ்ணனுடைய திருமார்பில் வசிப்பவளே, கிருஷ்ணனை பதியாக உடையவளே, மஹாலக்ஷ்மி, நமஸ்காரம். சந்திரிகையின் வடிவாக இருப்பவளே, அழகிய பத்மராகம் என்னும் கல்லாலேயே ஆக்கப்பட்ட சகல சம்பத்துக்களுக்கும் நாயகியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸம்பத்யதிஷ்டாத்ருதேவ்யை மஹாதேவ்யை நமோ நம:
நமோவ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:

ஐஸ்வர்யத்தின் வளர்ச்சியின் ஸ்வரூபமாக இருப்பவளே, மஹா தேவியாய் துலங்குபவளே, அந்த வளர்ச்சியைச் செய்பவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீர்யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்க லக்ஷ்மீரிந்த்ரகேஹே ராஜலக்ஷ்மீர் ந்ருபாலயே

வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும் பாற்கடலில் லக்ஷ்மியாகவும் இந்திரனுடைய வீட்டில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும் அரசனுடைய அரண்மனையில் ராஜ லக்ஷ்மியாகவும் விளங்குபவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா
ஸுரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணாயக்ஞகாமினீ

கிருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிப்பவர்களின் வீட்டில் கிருஹலக்ஷ்மியாகவும் வீட்டைப் பாதுகாக்கும் தேவதையாகவும் பாற்கடலிலிருந்து உண்டான காமதேனு வடிவில் விளங்குபவளும் யாகத்தில் தானம் செய்யும்

தட்சணை வடிவாய் விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.
அதிதிர் தேவமாதா த்வம் கமலா கமலாலயா
ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா

தேவர்களின் தாயான அதிதியாகவும் தாமரைப் பூவாகவும் தாமரைப் பூமாலையைத் தரித்தவளும் தாமரைப் பூவில் வசிப்பவளும் தேவதைகளுக்கு யாகம் செய்யும் போது ஹவிஸை எடுத்துச் செல்லும் ஸ்வாஹா தேவியாகவும் பித்ருக்களுக்கு யாகம் செய்யும்போது ஸ்வதா தேவியாகவும் விளங்குபவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸுந்தரா
ஸுத்த ஸத்ஸ்வரூபா த்வம் நாராயணபராயணா

விஷ்ணு வடிவாகவும் யாவற்றிற்கும் ஆதாரமான பூமிதேவியாகவும் சுத்த ஸத்வகுண வடிவாகவும் நாராயணனையே அண்டியிருப்பவளாகவும் விளங்கும் மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

க்ரோதஸிம்ஸா வர்ஜிதா ச வரதா ஸாரதா ஸுபா
பரமார்த்தப்ரதா த்வம் ச ஹரிதாஸ்யப்ரதா பரா

கோபம், பிறருக்குத் துன்பம் செய்வது இவற்றை அறவே வெறுப்பவளே, அபீஷ்டங்களை அளிப்பவளே, மங்களத்தைச் செய்யும் சரஸ்வதியே, பரமார்த்த வடிவினளே, மஹாவிஷ்ணுவிற்கு சேவை புரிபவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸர்வேஷாம் பரா மாதா ஸர்வபாந்தவரூபிணீ
தர்மார்த்த மாக மோக்ஷாணாம் த்வம் ச காரண ரூபிணீ

யாவர்க்கும் சிறந்த தாயாகவும் யாவர்க்கும் உறவினராகவும் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் போன்றவைகளை அளிக்கக் காரண வடிவாகவும் திகழும் மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

யதா மாதா ஸ்தனாந்தானாம் ஸிஸூனாம் ஸைஸவே ஸதா
ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்போல் விளங்குபவளே, அந்த சிசுக்களை அரவணைத்துக் காப்பவளே, அதேபோல எல்லா உயிர்களுக்கும் பாசமிகு தாயாக பரிபாலிக்கும் மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

மாத்ரு ஹீன: ஸ்தனாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத:
த்வயா ஹீனோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிஸ்சிதம்

பால் அருந்தும் குழந்தைக்கு தாயே இல்லாது போனாலும் அது தெய்வத்தின் அருளால் பிழைத்து வளர்ந்து வரும். ஆனால் தங்கள் அருளில்லாமல் உலகில் ஒருவர் கூட ஜீவிக்க முடியாத பேருண்மையே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸுப்ரஸன்ன ஸ்வரூபா த்வம் மாம்
ப்ரஸன்னா பவாம்பிகே
வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாதநி

அம்பிகையே, எழில் தோற்றத்துடன் எனக்கு நேரில் தரிசனமளிக்கக் கூடியவளே, சத்ருவினால் ஆக்ரமிக்கப்பட்ட என் நிலத்தை மீட்டுத் தரும் ஆதி ஸ்வரூபிணியான மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

அஹம் யாவத் த்வயாஹீனோ பந்து ஹீனச்ச பிக்ஷுக:
ஸர்வ ஸம்பத்விஹீனஸ்ச தாவதேவ ஹரிப்ரியே

மஹாவிஷ்ணுவின் மனைவியே! தங்கள் அருள் கிடைக்காத ஒருவன், உறவினர்கள் இல்லாதவனாயும் பிச்சைக்காரனாகவும் ஸர்வ ஸம்பத்துக்களற்றவனாயும் இருக்கும் உணர்வை அடைய வைப்பவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

க்ஞானம் தேஹி ச தர்மம் ச ஸர்வஸௌபாக்யமீப்ஸிதம்
ப்ரபாவம் ச ப்ரதாபம் ச ஸர்வாதிகார மேவ ச

நல்லறிவு, தர்மபுத்தி, கோரிய சகல பாக்யங்களையும் அருளும் பரோபகாரி, அடக்கும் சக்தி, யாவருக்கும் தலைமை ஏற்கும் அற்புத சக்தியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைஸ்வர்யமேவ ச
இத்யுக்த்வா ச மஹேந்த்ரஸ்ச ஸர்வைஸ்ஸுர கணைஸ்ஸஹ
ப்ரணநாம ஸாஸ்ருநேத்ரோ மூர்த்னா சைவ புன: புன:

யுத்தத்தில் சத்ருக்களை வென்று ஜயத்தையும் சிறந்த ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருளும் மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம். முப்பத்து மூன்று கோடி தேவர்களுடன் தேவேந்திரன் ஆனந்தக் கண்ணீர் விட்டு தலையால் பல முறை வணங்கி நமஸ்கரித்த மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

ப்ரஹ்மா ஸங்கரஸ்சைவ ஸேஷோ தர்மஸ்ச கேஸவ:
ஸர்வே சக்ரு: பரீஹாரம் ஸுரார்த்தே ச புன: புன:

பிரம்மன், சங்கரன், ஆதிசேஷன், தர்மதேவன், மஹாவிஷ்ணு முதலிய தேவர்களும் இந்திராதி தேவர்களுக்கு அவர்கள் விரும்பியதை எல்லாம் அருளிய மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

தேவேப்யஸ்ச வரம் தத்வா புஷ்பமாலாம் மனோஹரம்
கேசவாய ததௌ லக்ஷ்மீ: ஸம்துஷ்டா ஸுரஸம்ஸதி
யயும் தேவாஸ்ச ஸம்துஷ்டா: ஸ்வம் ஸ்வம் ஸ்தானம் ச நாரத:
தேவீ யயௌ ஹரே: ஸ்தானம் ஹ்ருஷ்டா க்ஷீரோதஸாயிந:

தேவர்கள் கோரிய வரங்களையெல்லாம் அளித்துவிட்டு, மனோஹரமான புஷ்ப மாலையை சந்தோஷத்துடன் மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அணிவித்தவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம். தேவர்களை சந்தோஷம் நிறைந்தவர்களாக, தத்தமது ஸ்தானங்களுக்கு அனுப்பி வைத்த மஹாலக்ஷ்மியே, தானும் மிகுந்த சந்தோஷத்துடன் பாற்கடலில் இருக்கும் தனது கணவனிடம் சென்றடைந்தவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய: படேந்நர:
குபேரதுல்ய: ஸ பவேத் ராஜ ராஜேஸ்வரோ மஹான்

இந்த ஸ்தோத்திரத்தை காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் படிக்கின்ற மனிதன் ராஜாதி ராஜனான குபேரனுக்கு நிகராகவும் மஹிமை வாய்ந்தவனாகவும் ஆவான் என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்த்திய மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + five =

Most Popular