சிவன் கொடுத்த உயிரை பாதுகாப்பது உண்டா?
சிவபெருமான் கொடுத்த உயிரை நாம் என்றாவது பாதுகாத்தது உண்டா?
எம்பெருமான் சிவபெருமான் குடியிருக்கும் இவ்வுடலை தூய்மைப்படுத்திய
துண்டா?
கொடுத்ததையே பாதுகாப்பதில்லை, சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல்
சரியான நேரத்தில் உறங்காமல் இருக்க இடம் உடுக்க உடை உண்ண உணவு
என்று அனைத்தும் கிடைத்த பின்பும் மன அமைதியோடு வாழாமல் உயிரை கொன்று மாமிசம் உண்ணுதல், சூது, போதை, பேதை என்று வாழ்ந்து வாழ்வின்
இறுதி காலத்தில் கொன்ற பாவம் தின்றவனுக்கும் உண்டு என்ற வார்த்தையை
தன் தேவைக்காக மாற்றி அமைத்து கொன்ற பாவம் தின்றால் போச்சு என தவறாக புரிந்து வாழும் போது தண்டனை கிடைக்குமா கிடைக்காதா? தண்டனை கிடைத்து அனுபவிக்கும் போது இதில் பேச்சு வேற கொடுத்தவனே பறித்துக்கொண்டான் என்று
நம்மை நாமே பாதுகாக்க தெரியாமல் மற்றவரை பாதுகாக்க ஓடுவதை நிறுத்துவது எப்போ?
ஐந்தெழுத்து மந்திரம்:
1. சிவனார் ஆலயம் சென்று வணங்கி கொள்ள வேண்டும்.
2. உனக்குள் இருக்கும் சிவனை போற்ற வேண்டும்
3. சிவன் கொடுத்த உடலில் உருத்திராக்கம் அணிந்து கொள்ள வேண்டும்
4. திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்
5. சிவ மந்திரம் பாடிக்கொள் நல்லதே நடக்கும் என எம்பெருமான் சிவபெருமான் திருவடி வணங்கி கொள்ள வேண்டும்.
ஆன்மீக வாழ்க்கை வழிமுறைகள்:
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒரு வகை ஆன்மீகம்
பேச்சும் மூச்சும் சிவம் உயிரும் உடலும் தமிழ். ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல ஆன்மீகம்.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை
நான் தினமும் மூன்று முறை குளிக்கிறேன்
ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன், ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக் கொள்கின்றனர்
ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு
அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும்.
இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை
அதை அவர் விரும்புவதும் இல்லை. அவர் விரும்புவதெல்லாம் அனைவர் இடத்திலும் அன்பு ஒன்றே ஒன்று தான் அது தான் உண்மையான பக்தி இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவரை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவரால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவருக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம் வழி கடவுள் அனைத்திலும் இல்லை.
ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு.
இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்
நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும்.
ஓம் நமசிவாய
அவன் இவன் என்று தேடாதே
சிவனை நாடு சிவன் புகழ் பாடு
சிவன் திருவடியை பணிந்து பற்று
வணங்குதற்குரியவர் அனைவரும்
வழிபாட்டுக்குரியவர் சிவன் ஒருவரே
