பிராா்த்தனை செய்யும் முறைகள்!
பிறர் காதில் விழும்படி பிராா்த்தனை செய்வது வாசிகம் எனப்படும். தனது காதில் மட்டும் விழும்படி பிராா்த்தனை செய்வது உபாம்சு என்று அழைக்கப்படுகிறது. மனதினால் மட்டும் பிராா்த்தனை செய்வது மானஸம் ஆகும். வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும். உபாம்சு நூறு மடங்கு பயனளிக்கும். மானஸம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும்.
வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இருக்கும்போது கைகூப்பி வணங்க சில விதிமுறைகள் உள்ளது. இறைவனை வணங்கும் போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக் கூடாது. தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும்வீட்டு பூஜை அறையில் வழிபாடு செய்யும் போது ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வரும். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும்.
அப்போது புத்துணர்ச்சி ஏற்படும். பூமி சக்தி சிறிய (சுண்டு)விரல் மூலமாகவும் தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும் அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும் வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும் ஆகாய சக்தி பெருவிரல் வழியாகவும் செல்லும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறாா்கள். இத்தகைய புத்துணர்ச்சியுடன் செய்யப்படும் செயல்கள் வெற்றி பெறும்.இது நமது வீட்டு பூஜை அறை நமக்குத் தரும் ஈடு இணையற்ற பலனாகும்.
இல்லத்தில் சுபிக்ஷம் கூடி வர துளசி வளர்ப்போம் இறைவன் ராமனை அனுமனை வணங்குவோம். புரட்டாசி மாதத்தில், துளசியை வணங்குவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் விசேஷம். இதுவரை இல்லாவிட்டாலும் வீட்டில் துளசிச்செடி வைத்து, புரட்டாசி மாதத்தில் வளர்க்கத் தொடங்குங்கள். உங்கள் இல்லத்தில் அனைத்து சுபிட்சங்களையும் நிறைத்து அருள்பாலிப்பார்கள் மகாலக்ஷ்மியும் வேங்கடவனும்.
புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதம் என்பது வேங்கடவனுக்கு உரிய மாதம். புரட்டாசி என்பது விரதம் மேற்கொள்வதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் திருமாலை தரிசிப்பதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் நமக்குமான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் முடியும். காரியம் யாவும் வெற்றியைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
துளசி, பொதுவாகவே மணம் கமழக்கூடியதுதான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் இன்னும் மகிழ்வுடன் தன் நறுமணத்தைப் பரப்பும் என்பதாக ஐதீகம். இந்த மாதத்தில், தன் சக்தியையும் நறுமணத்தையும் வீரிய குணங்களையும் ஒருங்கே கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களையும் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி, அங்கிருந்தபடியே உலகையும் மக்களையும் ஆசீர்வதித்துக் காத்தருளும் மகாலக்ஷ்மி, துளசியில் வாசம் செய்கிறாள். இந்த மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தும் போது, தன் மணாளனனின் தோளில் சேரப்போகிறோம், அணிகலன் போல் நம்மை சார்த்தப் போகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து போகிறாளாம் மகாலக்ஷ்மி.
துளசியானது புனிதத் தன்மை வாய்ந்தது. மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடியது. பெருமாளுக்கு சார்த்தப்படும் முக்கிய பூ உள்ளிட்டவற்றில் துளசிக்கு மகத்தானதொரு இடமுண்டு. துளசிச் செடியை வளர்ப்பதும் துளசிச் செடியை சுற்றி வந்து ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகிறது புராணம்.
மேலும், இதுவரை வீட்டில் துளசிச்செடி இல்லாவிட்டாலும் கூட, வளர்க்காவிட்டாலும் கூட, புரட்டாசி மாதத்தில் துளசிச்செடியை வீட்டில் வளர்ப்பது சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். துளசிச்செடி வளர்ப்பதால் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவும். ஆனந்தம் வழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
