Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamகிருஷ்ண ஜெயந்தி 2023 எப்போது?

கிருஷ்ண ஜெயந்தி 2023 எப்போது?

கிருஷ்ண ஜெயந்தி 2023 எப்போது?

கிருஷ்ணர் ஆவணி மாத அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தன்று தான் அவதரித்தார். அவர் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கோகுலத்தில் தான். இதனால் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக பெரும்பாலானவர்கள் கொண்டாடினாலும், அவர் கோகுலத்திற்கு வந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி நாள் என்று யாதவ குலத்தினரும் கொண்டாடும் வழக்கம் உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி 2023

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த பண்டிகை இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் நள்ளிரவில், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் என சொல்லப்படுகிறது. இதனால் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கோகுலாஷ்டமியாகும்.

ஜென்மாஷ்டமி 2023 சரியான தேதி:

இந்த ஆண்டு செப்டம்பர் 06 ம் தேதி கோகுலாஷ்டமி என நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 06 ம் தேதி இரவு 09.14 க்கு பிறகே அஷ்டமி திதி துவங்குகிறது. அதே போல் செப்டம்பர் 06 ம் தேதி மாலை 03.25 க்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. அதோடு செப்டம்பர் 07 ம் தேதி தான் நாள் முழுவதும் அஷ்டமி திதி காணப்படுகிறது. அன்று இரவு 09.14 மணிக்கு பிறகே நவமி திதி துவங்குகிறது. அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. அதற்கு பிறகே மிருகசீரிஷம் நட்சத்திரம் துவங்குகிறது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் நேரம்:

இதனால் கிருஷ்ண ஜெயந்தியை செப்டம்பர் 06 ம் தேதி கொண்டாடுவதா அல்லது செப்டம்பர் 07 ம் தேதி கொண்டாடுவதா என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவு நேரத்தில் என்பதால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கான நாள் செப்டம்பர் 06 ம் தேதி தான்.  கிருஷ்ண பூஜையை செப்டம்பர் 06 ம் தேதி இரவு 11.57 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 12.42 மணிக்கே நிறைவு செய்ய வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறை:

கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் செப்டம்பர் 06 ம் தேதி தான் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். செப்டம்பர் 07 ம் தேதி அதிகாலை 04.14 மணிக்கு பாரணை செய்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். செப்டம்பர் 06 ம் தேதி பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம்.

நைவேத்தியங்கள்

நள்ளிரவில் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்திற்கு பழங்கள், மலர்கள், தேங்காய், நெய்யினால் செய்த பலவிதமான இனிப்பு பலகாரங்கள், வெண்ணெய், ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுடன் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =

Most Popular