Wednesday, October 18, 2023
HomeArthamulla Aanmeegamஎந்தேந்த நட்சத்திரக்காரர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்?

எந்தேந்த நட்சத்திரக்காரர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்?

எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வந்தால் சிறப்பு!

அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாகாளியை வணங்குவது நல்லது. திருவாலங்காடு சென்று வழிபட்டு வருவது நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும்.

கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்குவது நல்லது. திருநாகை சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.

ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகநாதசுவாமியை வழிபடுவது நன்மையை செய்யும். ஒரு முறையேனும் திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம்
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்காதேவியை வழிபட்டு வர நன்மைகள் அதிகரிக்கும். ஒருமுறையேனும் கதிராமங்கலம் சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் நடந்தேறும். ஒரு முறையேனும் திருநள்ளாறு சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஆலங்குடி சென்று குருபகவானை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.

பூசம்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். குச்சனூர் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் திருப்பரங்குன்றம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தில்லை காளியை வழிபட வாழ்வில் பல நன்மைகள் நடைபெறும். சிதம்பரம் சென்று வருதல் நலம் தரும்.

பூரம்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகுபகவானை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் திருமணஞ்சேரி சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

உத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாஞ்சியம்மனை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் மூவனூர் சென்று வருதல் நலம் தரும்.

அஸ்தம்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சுவாதி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையாவது திருவானைக்காவல் சென்று வருதல் நலம் தரும்.

விசாகம்
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் சோழவந்தான் சென்று வருதல் நலம் தரும்.

அனுஷம்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ மூகாம்பிகையை வழிபட்டு வர நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவிடைமருதூர் சென்று வருதல் நலம்.

கேட்டை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வணங்கி வருதல் நலம். ஒரு முறையேனும் பல்லடம் கோயில் சென்று தரிசித்து வருவது நலம் தரும்.

மூலம்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வணங்கி வருவது நல்லது. ஒரு முறையேனும் மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டு வாருங்கள்.

பூராடம்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் திருநாவலூர் சென்று வாருங்கள் நன்மை உண்டு.

உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையும், துர்காதேவியையும் வணங்குவது நன்மை தரும்.ஒரு முறையேனும் தர்மபுரம் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜகாளியம்மனை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தெத்துப்பட்டி சென்று வருதல் நலம் தரும்.

அவிட்டம்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் நீங்கள் வணங்குவது நன்மை தரும். முடிந்தால் ஒரு முறை கொடுமுடி சென்று வருதல் நலம்.

சதயம்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வரவும்.

பூரட்டாதி
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷன், சித்ரகுப்தர் ஆகிய இவர்களை வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருவையாறு கோயில் சென்று வணங்கி விட்டு வாருங்கள்.

உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இவர்கள் இருவரையும் வணங்குவது நல்லது. முடிந்தால் திருவையாறு சென்று இறைவனை வழிபட்டு வாருங்கள்.

ரேவதி
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. முடிந்தால் ஓமாம்புலியூர் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + eighteen =

Most Popular