Thursday, October 19, 2023
HomeAstrological Remediesஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்!

ஏழரைச்சனிக்கு மிகவும் எளிமையான பரிகாரம்!

ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும்.

ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம்.

முந்தைய ராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம ராசியில் இரண்டரை வருடம், நமது ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி என்கிறோம்.

ஆக 22 வருடங்களுக்கு ஒரு முறை ஏழரைச் சனி என்பது நமது வாழ்வில் இடம் பிடிக்கிறது. இந்தக் காலத்தில் சிறு சிறு தடங்கல்களை சந்திக்க நேரிடுமே தவிர பெரிய அளவிலான பாதகங்கள் ஏதும் ஏற்படாது. முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்பவும், நமது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவும் சனி பகவானின் பாதிப்பு அமையும்.

எப்போதும், முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களை ஏற்ப தான் நமக்கு சனி பகவான் மூலமாக தண்டனை கிடைக்கும்.

அவரவர் ஜாதக ரீதியாக நடைபெறும் தசாபுக்தியே பலன்களை நிர்ணயம் செய்யும் சனி பகவான் தனது கடமையைச் செய்வதில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரால் உண்டாகும் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

எனினும் ஏழரைச் சனியின் தாக்கத்தினைப் பெறுபவர்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு தயிர் கலந்த சாதத்தில் எள்ளு சிறிதளவு கலந்து வைப்பது நல்லது.

சனிக்கிழமையில் வீடு வாசல் தேடி வரும் பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற உணவினை தர்மம் செய்ய வேண்டும்.

ஆதரவற்ற முதியவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வதும் சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரமே ஆகும்.

அதுமட்டுமின்றி, சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். அதோடு, துப்புரவு வேலை செய்பவர்களுக்கு காலனி, குடை தானம் செய்ய வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =

Most Popular