Saturday, October 28, 2023
HomeAstrological Remediesவிருட்சங்கள் பரிஹாரம்

விருட்சங்கள் பரிஹாரம்

ஜோதிட ரீதியாக இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு விருட்சங்கள் பரிஹாரம் செய்து கொள்ளுவது உண்டு,

எப்படி பசு, எருது போன்றவை காமதேனு வகையின் தெய்வீகமானதோ அதே போல் விருட்சம் என்பதும் கற்பக விருட்சத்தின் வகையில் தெய்வீகமானது. அதைகையா விருட்சத்தின் மூலம் பெரும் பயனை அடைய முடுயும்.

எந்த விருட்சமும் அவ்வளவு எளிதில் இந்த மண்ணை விட்டு அழிந்து விடுவதில்லை, அதை வெட்டினாலும் அது திரும்ப முளைத்து வேரூன்றி இங்கேயே அதனை சுற்றி வைத்திருக்கும் நினைவுகளுடன் வாழ்ந்து தியாகத்துடன் திகழும். அப்படி பட்ட விருட்சத்திற்கு நாம் வழிகோலாக விளங்கினால் பெரும் புண்ணியவான் ஆவோம். அதன் வகையில் நாம் நமது பாவத்தை போக்கி பரிஹாரம் செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.இருபத்தேழு நட்சத்திரங்களுக்கு உரிய இருபத்தேழு விருட்சங்கள் உண்டு,அவை

1. அஸ்வினி – எட்டி,
2. பரணி – நெல்லி,
3. க்ருத்திகை – அத்தி,
4. ரோஹிணி – நாவல்,
5. ம்ருகசீர்ஷம் – கருங்காலி,
6. திருவாதிரை – செங்கரு,
7. புனர்பூசம் – மூங்கில்,
8. பூசம் – அரசு,
9. ஆயில்யம் – புன்னை,
10. மகம் – ஆலம்,
11. பூரம் – பலா,
12. உத்திரம் – அரளி,
13. ஹஸ்தம் – வேல்,
14. சித்திரை – வில்வம்,
15. ஸ்வாதி – மருதை,
16. விசாகம் – விளா,
17. அனுஷம் – மகிழம்,
18. கேட்டை – பிராய்,
19. மூலம் – மாமரம்,
20. பூராடம் – வஞ்சி,
21. உத்ராடம் – பலா,
22. திருவோணம் – எருக்கு,
23. அவிட்டம் – வன்னி,
24. சதயம் – கடம்பு,
25. பூரட்டாதி – தேமா,
26. உத்திரட்டாதி – வேம்பு,
27. ரேவதி – இலுப்பை.
உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் 27 நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள் பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.

இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − fourteen =

Most Popular