Wednesday, October 18, 2023
HomeSlogamகிரக தோஷங்கள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

கிரக தோஷங்கள் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

நவகிரகங்களில் சோதனைகளை அதிகம் கொடுக்கும் கிரகங்களான “ராகு, கேது, சனி” கிரக தோஷங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஆஞ்சநேயரின் இம்மந்திரத்தை கூறலாம்.

நவகிரகங்களில் சோதனைகள் மற்றும் முன்வினைப்பயன்களுக்காக தண்டனைகளை அதிகம் கொடுக்கும் கிரகங்களான “ராகு, கேது, சனி” கிரக தோஷங்களால் ஒரு மனிதன் படும் பாடு சொல்லி மாளாது. அப்படி அத்தகைய கிரக தோஷங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள “ஸ்ரீ மாருதியான” “ஆஞ்சநேயரின் இம்மந்திரத்தை கூறலாம்.

அனுமன் மந்திரம்:

“அஞ்ஜனா கர்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரம்மச் சாரினாம்
துஷ்ட கிரஹ விநாஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே”

இம்மந்திரத்தை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக அருகிலுள்ள ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று, எலுமிச்சம் பழத்தை கரண்டி அதில் நெய் ஊற்றி விளக்கேற்றி 108 முறை கூறி ஆஞ்சநேயரை வழிபடவேண்டும்.

மேலும் இம்மந்திரத்தை கிரக தோஷங்கள் விலக துதித்து வரும் சனிக்கிழமைகளில் உளுந்தையும் வெல்லத்தையும் ஏதேனும் ஒரு ஏழைக்கு அல்லது உங்களிடம் பணிபுரியும் பொருளாதார வசதி குறைந்த பணியாளர்களுக்கு தானம் வழங்க வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த ஆஞ்சநேயரின் பூரண அருள் உங்களுக்கு கிடைத்து உங்கள் கிரக தோஷம் நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 7 =

Most Popular