Saturday, October 28, 2023
HomeSlogamகுரு பகவானின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய குருகவசம்!

குரு பகவானின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய குருகவசம்!

குரு பகவானின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய குருகவசம்!

சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப் பரவு
மெய்ஞ் ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தேரியல் அறிஞன தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி
அரும் பிருகற்பதிப் பேர்
ஆண்டகை சென்னி காக்க
வருந்திரு நெற்றி காக்க
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க

பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவன் அரசன் காக்க
பாட்டு அமர்செவ்வாய் வேத
பாரகன் காக்க துண்டம்
கூட்டு முற்றிவன் காக்க
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து
ஆள்வோன் விரும்பினன் காக்க
செங்கை வாட்டும் வச்சிரங்
கைக்கொள்ளும் வானவன்
வழாது காக்க பருவரை
பொருவு மார்பம் பயிலுங்கீட்பதி
புரக்க விருதனம் வாக்கு
வல்லோன் என்றும் வந்து
எய்திக் காக்க வருசுகம்
நல்கும் நாதன் வயங்கு
எழில் வயிறு காக்க
பொருவரு நீதி வல்லோன்
பொற்புஉறு நாபி காக்க
எங்கும் சென்று அளிக்கும்ஈசன்
எழிற்கடி புரக்க ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க மேனி
அமர் குருப் புரத்து காக்க
காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும் நூலை
அன்போடு உரைக்கும் நுண்ணியன்
வேட்டாங்கு எய்திச் சோலைஅம்
தரு விண்ணாட்ட சுரரையும்
வெற்றி கொள்ளும் மறைமிகு கலைநூல்
வல்லோன் வானவர்க்கு அரசன்
மந்திரி நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதி பனாகி நிறைதனம்
சிவிகை மண்ணில் நீடு போகத்தை
நல்கும் இறையவன் குரு
வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி போற்றி.!

குரு பகவான தட்சணாமூர்த்தி யின் இந்த குரு கவசத்தை வியாழக்கிழமை அன்று வீட்டில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்து விளக்கேற்றி ப்ராத்தனை செய்து வந்தால் குரு பார்வை கிட்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முன்னேற்றம் அளித்து குரு பகவான் அருள் புரிவார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

Most Popular