Thursday, October 19, 2023
HomeSlogamராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்

ராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்

துன்பங்களை போக்குபவளான ஸ்ரீதுர்க்கையை போற்றும் மங்கள சண்டிக ஸ்தோத்திரத்தை, ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

துன்பங்களை போக்குபவளான ஸ்ரீதுர்க்கையை போற்றும் மங்கள சண்டிக ஸ்தோத்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்

ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே ! செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

தேவீம் ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

விளக்கம்: தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

விளக்கம்: காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

விளக்கம்: பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

விளக்கம்: மங்களத்தை தரும் மங்கள நாயகியே ! என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

விளக்கம்: பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

விளக்கம்: மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே மாந்தருக்கு மோட்சத்தை அளிப்பவளே !

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 5 =

Most Popular