Saturday, October 14, 2023
HomeSlogamசக்திவாய்ந்த ஸ்ரீ சரபேஸ்வரர் கவசம்

சக்திவாய்ந்த ஸ்ரீ சரபேஸ்வரர் கவசம்

இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப்பேரழிவும், தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனோ வியாதிகள், தொடர்ந்து வந்து உறுத்தும் ஊழ்வினையின் காரணமாக பரிகாரமே காணமுடியாது என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய செய்வினைகளும் தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஓடிவிடும்.

“நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த

பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!

ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை

உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே

சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே

கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!

பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!”

ஸ்ரீ சரபேஸ்வரர் பூசை செய்வதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரமாகும். இந்த ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள்.

ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − fifteen =

Most Popular