ஸ்ரீ மான் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
ஸ்ரீகோதா ஸ்துதி
———————————-
1. ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே ||
ஸ்ரீ பெரியாழ்வாரின் குலத்தில் தோன்றிய கற்பகக்கொடி ; அழகிய மணவாளனாகிய ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் கொடி ;; பூமிப் பிராட்டியின் அவதாரம்; கருணையே உருவாகி, பெரிய பிராட்டியைப் போல இருப்பவள்; இப்படிப்பட்ட கோதா பிராட்டியை ,எந்தப் புகழும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன் ஸ்லோகத்தின் முதல் வரி, ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத்தையும் ,இரண்டாவது வரி, அவளது திருக் கல்யாண விசேஷத்தையும் ,மூன்றாவது வரி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியைப்போலக் கருணையே உருவானவள் என்றும், அப்படிப்பட்ட கோதா தேவியைப் புருஷகாரமாகப் பற்றி சரணம் அடைகிறேன் என்று நாலாவது வரியிலும் சொல்கிறார்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !
