எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி,
கண்ணைப் புரட்டி விழித்து, கழகண்டு செய்யும் பிரானே,
உண்ணக் கனிகள் தருவன், ஒலிகட லோதநீர் போலே,
வண்ணம் அழகிய நம்பீ, மஞ்சன மாடநீ வாராய்!
“எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற சிறு குழந்தைகளை கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, தூக்கம் விட்டு எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி அப்பூச்சி காட்டி விழித்து பொறுக்க முடியாத குறும்புகளை செய்யும் கண்ண பிரானே!
நல்ல பழங்களை நீ உண்ணும்படி, உனக்குக் கொடுப்பேன். கோஷியாகின்ற கடல் அலைகளையுடைய நீர் போலே திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற உத்தமபுருஷனே! மஞ்சனம் ஆட நீ வாராய்!” என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
