சிவனைத் துதித்து ஸ்வாதி நட்சத்திரக்காரர் உய்வடைய மகான், ஆதிசங்கரர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
https://swasthiktv.com/madhura-gaanam-registration/
ஸர்வ ஜீவரக்ஷணைக சீலினே நம:
சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம:
சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
பொருள்: எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களை அரவணைத்துக் காப்பவரும், தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடைய வரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
