திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!
பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும். இறக்கும் போது கடைசியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான் என்பதை உணர்த்துவது தான் திருநீறு. இதற்கு விபூதி என்ற பெயரும் உண்டு.
திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே
