வாழ்க்கையில் முன்னேற சொல்ல வேண்டிய துர்கா கணபதி மந்திரம்!
யாராக இருந்தாலும் வாழ்க்கை என்று வந்து விட்டால் முன்னேறத்தான் ஆசைப்படுவார்கள். கர்ம வினை, செய்த பாவங்கள் ஆகியவற்றின் பலனாக வாழ்க்கையில் மோசமான நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்ட நிலையிலிருந்து முன்னேறிச் செல்ல துர்கா கணபதி மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
துர்கா கணபதி மந்திரம்:
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும்
துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
மாத்ரு வத்ஸலாய
மஹா கணபதயே நம!
தினந்தோறும் துர்கா கணபதி மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் 108 முறை துர்கா கணபதி மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும்.
