முன்வினை பாவங்கள் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்!
இன்றைய தினம் அஜா ஏகாதசி. இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர்.
இந்நாளில் எவரொருவர் உபவாசம் இரு ந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிரா ரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவி னைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகா பாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார். முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என் றொரு அரசன் சத்தியம் தவறாது மா பெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத் தோடு விளங்கியது.
அரிச்சந்திர மகாராஜா:
விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக் க நேரிட்ட தோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப் பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடி மையாகி மயா னத்தைக் காக்கும் பணியி ல் அமரவைத்தது விதி. ஆனால் அந்நிலை யிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத் தன்மையை இழக்கா மல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.
முனிவரின் ஆலோசனை:
பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்த னை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலி ருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவ ரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.
ஏகாதசி விரதம்:
அரிச்சந்திரனின் சோக கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா, உன் நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.
கண்விழித்து விரதம்:
இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபி டிக்க முடியாவிட்டாலும், உபவாசத் தை மட்டுமா வது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறை வன் ஸ்ரீஹரியின் திருநா மத்தை உச்சரித்து கொண்டிரு . இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களி ல் இருந்து விடுதலை பெற்று நன்னிலை யை அடைவாய் எனக் கூறினார்.
ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன்:
அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகா ட்டு தலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாச ம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தி னை பெற்று நன்னிலையை அடைந்தான். இந்த விரதத்தி ன் பலனால் மாயையின் காரணத்தால் உயிரி ழந்த மகனை மீண்டு ம் அடைந்ததோடு, மனை வியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடை ந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் தர்மருக்குக் கூறி முடித்தார்.
அஜா ஏகாதசியின் சிறப்புகள்:
அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், “பாண்டு புத்ரா, நீயும் இப்போது இந்த அஜா ஏகாத சியின் சிறப்புகளை அறிந்து கொள்..” எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவி களில் செய்த பாவங்க ளின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியி ல் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.
அஸ்வமேத யாகம் செய்த பலன்:
எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தி ன் மகிமையை விவரிக்கும் இந்தக் கதை யினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறா ரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வ மேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.
