மாசி மகத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
- சிவன் தனது திருவிளையாடல்களை அரங்கேற்றியது மாசி மாதத்தில் தான்.
- மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுதத்து மாசி மகத்திருநாளில் தான்.
- மாத மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.
- அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது இந்த மாசி மகம் தான்.
- குலசேகர ஆழ்வார் அவதரித்தது மாசி மாதம் வரும் புனர்பூச நட்சத்திரம்.
- மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷம். அந்த நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
- மாசி மாத த்தில் தான் பார்வதி தேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காக தோன்றினாள்.
- மாசி மாத பூச நட்சத்திரம் நாளன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
- உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அதனை தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
- மாசி மகத்தன்று காமதகன் விழா நடைபெறுகிறது.
- காரடையான் நோன்பு மற்றும் சாவித்ரி விரதமும் இந்த மாதத்தின் விசேஷ விரதங்கள்.
- மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். இந்த மாதத்தில் புது வீடு கிரகப் பிரவேசம் செய்யலாம்.
- மாசி மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
- மாசி மக நாளில் புனித நீராடல் செய்ய முடியாதவர்கள் மாசி மக புராணம் படிக்கலாம்.
- மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
- மாசி மக நாளில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.
- மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
- மாசி சுக்லபட்ச பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.
