பழநி முருகனின் கோவண ரகசியமும் பழம் நீ என்பதன் அர்த்தமும்!
பழனி தண்டாயுதபாணி கோயிலில் முருகப்பெருமான் ஏன் கோமணத்துடன் காட்சி தருகின்றார். அவருக்கு ஏன் ராஜ அலங்காரம் செய்யப்படுகின்றது. பல அலங்காரங்கள் செய்யப்படுவதன் ரகசியம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பழநி முருகன் கோயில்:
முருகனின் ஆறுபடை வீடுகளில் மிக முக்கியமானதாக பழநி திருக்கோயில் விளங்குகின்றது. பழனியில் அருளக் கூடிய தண்டாயுதபாணி சுவாமிக்கு ஞானப்பழம் என்ற பெயரும் உண்டு. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல் பழநி மலை மீது காட்சி தரும் முருகப்பெருமான் தினமும் காலை முதல் இரவு வரை அடிக்கடி தன் கோலத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்.
கோவண ரகசியம்:
தினமும் மாலை வேளையில் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் முருகப்பெருமான், மறுநாள் காலையில் கோவணம் மட்டும் அணிந்து ஆண்டி வேடத்துடன் காட்சியளிப்பார். என் அலங்காரம் போல உலக வாழ்க்கையும் மாறக்கூடியது.
பழநி மலை முருகன் நவபாஷண சிலை அதிசய தகவல்கள் – கோயிலின் சிறப்பம்சங்கள்:
இந்த உலக வாழ்க்கை போலியானது. இன்று உன்னுடன் இருக்கும் பொருள் நாளை உன்னுடன் இருக்கும் என்பது நிதர்சனம் இல்லை. நீ பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அதே போல் நீ இறக்கும் போது நான் உடுத்தி இருக்கும்
கோவணம் கூட வரப்போவதில்லை.
“நீ எப்படி வந்தாயோ, அப்படியே போவாய்” என்பதை உணர்த்தும் விதமாக முருகப்பெருமான் கோவணத்துடன் காட்சி தருகின்றார்.
ஞானப்பழம்:
மனிதர்களுக்கு உலக வாழ்க்கை தத்துவத்தை உணர்த்த ஞானத்தை பழமாக வழங்குவதால், முருகனுக்கு ‘ஞானப்பழம்’ என்ற பெயர் வந்தது. இதை உணர்ந்த ஒளவையும் முருகனை ‘பழம் நீ’ என அழைத்தார். சேலத்தில் உருவாகிறது.
உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை!
பழனி மலைக்கோயில் முருகன் அலங்காரம்:
பூஜை நேரம் அலங்காரம்:
விளா பூஜை காலை 6.40 சன்யாசி அலங்காரம்
சிறு காலசந்தி காலை 8.00 பாலசுப்பிரமணியர் அலங்காரம்
காலசந்தி காலை 9.00 பாலசுப்பிரமணியர் அலங்காரம்
உச்சிகாலம் பகல் 12.00 வைதிகாள் அலங்காரம்
சாயரட்சை பூஜை மாலை 5.30 இராஜ அலங்காரம்
அர்த்தஜாம பூஜை இரவு 8.00 புஷ்ப அலங்காரம்
