Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamசகல தோஷமும் தீரும் பிரதோஷ வழிபாடு!

சகல தோஷமும் தீரும் பிரதோஷ வழிபாடு!

சகல தோஷமும் தீரும் பிரதோஷ வழிபாடு!

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திரு நீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

பிரதோஷ விரதத்தின் பலன்கள்:

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

சகல தோஷமும் விலகும்: பிரதோஷ மந்திரம்:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய
மஹாதேவாய தே நமஹ !!

சிவபெருமான் ஒரு அபிஷேகப் பிரியர். எனவே, அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும்.

இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும். அதுவே சனிக்கிழமை களில் வரும் மகாப் பிரதோஷத்தன்று இறைவனை வழிபட்டால், 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும்.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனிப்பிரதோஷத்தன்று சிவன் கோயிலுக்கு சென்றால் 5 வருடங்கள் சிவனை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். தேவர்களை காப்பதற்காக சிவன் ஆலகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. ஆதலால், சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ நாளன்று ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை சொல்லி வர 7 தலைமுறைகள் செய்த பாவங்கள் யாவும் நீங்கும். சிவனை வழிபட உகந்த நாளாக இந்த சனிப்பிரதோஷ நாள் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − one =

Most Popular