Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamஸாயீ நாமத்தின் சக்தி

ஸாயீ நாமத்தின் சக்தி

 

பாபா காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.

அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, ஸாயீ ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.

அந்த சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். ஸாயீ மீதான அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.

ஸாயீ நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். “ஸாயீ நாமத்தின் சக்தி” அவ்வளவு பிரம்மாண்டமானது.

சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் ஸாயீயால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும்போதுதான் ஸாயீயின் ஞாபகம் வருகிறது ! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன.

சாயினுடைய கிருபை

பாபாவின் தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜென்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின் மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும். சாயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜென்மங்களாக நாம் சேமித்த பாவங்களை அளித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை நமக்கு அளிக்கும்.ஸாயீ நாமத்தின் சக்தி

பாபா காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.

அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, ஸாயீ ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.

அந்த சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். ஸாயீ மீதான அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.

ஸாயீ நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். “ஸாயீ நாமத்தின் சக்தி” அவ்வளவு பிரம்மாண்டமானது.

சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் ஸாயீயால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும்போதுதான் ஸாயீயின் ஞாபகம் வருகிறது ! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன.

சாயினுடைய கிருபை

பாபாவின் தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜென்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின் மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும். சாயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜென்மங்களாக நாம் சேமித்த பாவங்களை அளித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை நமக்கு அளிக்கும்.

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 11 =

Most Popular