Tuesday, October 24, 2023
HomeArthamulla Aanmeegamசிவாய நம என்று சொன்னால் என்னென்ன நன்மைகள்?

சிவாய நம என்று சொன்னால் என்னென்ன நன்மைகள்?

சிவாய நம என்று சொன்னால் என்னென்ன நன்மைகள்?

ஒரு மணிநேரம் சிவாயநம என்று சொன்னால் என்னென்ன பலன் தெரியுமா?

  1. ஒரு மணி நேரம் நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது.
  2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சமமாக வாழ்ந்ததாகிறது.
  3. ஒரு மணி நேரம் உத்தமன் போல் உண்மையை பேசியதாகிறது.
  4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிட்சைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.
  5. ஒரு மணி நேரம் சிவ வழிபாடு  செய்ததாகிறது.
  6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது.
  7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது
  8. ஒரு மணி நேரம் நான்மறைகள் ஓதுவதாகிறது.
  9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.
  10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள்.
  11. ஒரு மணி நேரம் நீங்கள் மகான்களால் வாழ்த்தப்படுகிறீர்கள்.
  12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை வெற்றி கண்டவர்கள் ஆகிறீர்கள்.
  13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
  14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.
  15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.
  16. ஒரு மணி நேரம் நேர்மறையாக இருக்கிறீர்கள்.
  17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
  18. ஒரு மணி நேரம் நடராஜன் பிடித்துக்கொண்டு இருக்கிறான்.
  19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
  20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை நீலகண்டன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.
  21. ஒரு மணி நேரம் நாயன்மார்கள் சித்தர்கள் வாயில் வந்த நாமத்தை சிவாயநம என நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
  22. இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
  23. ஒரு மணி நேரம் சிவவேள்வி செய்தவர் ஆகிறீர்கள்.
  24. ஒரு மணி நேரம் ஈசனயே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.
  25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
  26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
  27. ஒரு மணி நேரம் காவிரி, வைகையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
  28. ஒரு மணி நேரம் கைலாய வாசத்தில் உள்ளவர் ஆகிறீர்கள்.
  29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்ணியத்தை சம்பாதிக்கிறீர்கள்.
  30. எல்லாவற்றிற்கும் மேல் நாம் வேறு இல்லை சிவம் வேறு இல்லை… நாமே சிவம் சிவமே நாம் என்பதை உணர்கிறோம்…
  31. அந்த ஒரு மணி நேரம் இறைவனை மனமுருகி சொல்லும் நாமத்தால் உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்…

ஒருமணி நேரத்திற்கு இவ்வளவு பலனென்றால் சதா சர்வமும் சிவனே கதியென இருந்தால் நிச்சயம் நம்மை நாம் வென்று தம்முள் ஈசனை காணலாம்…

சிவாயநம…

இதற்கெல்லாம் நிச்சயம் பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே சிவன் நாமத்தையும் சொல்ல முடியும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − three =

Most Popular