அட்சய திருதியை விரதம் எப்படி இருப்பது?
அட்சய திரிதியை (அட்சய திருதியை) வைஷாக மாதம் சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. அட்சய திரிதியா இந்து மதத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அட்சய என்ற வார்த்தையின் அர்த்தம் ‘எதுவும் அழியாதது அல்லது அழியாதது’ என்பதாகும். அத்தகைய சூழ்நிலையில், நம்பிக்கையின்படி, ஒருவர் தானம், ஸ்நானம், யாகம், மந்திரம் போன்ற சுபகாரியங்களைச் செய்தால், அதனால் வரும் அசுப பலன்களுக்குச் சிதைவு ஏற்படாது என்று கூறப்படுகிறது.
அட்சய திரிதியை திதி மற்றும் நல்ல நேரம்:
இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 23 (இன்று) வந்துள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 09:18 மணிக்கு திரிதியை திதியின் ஆரம்பம் தொடங்கி 23 ஆம் தேதி காலை 09:27 மணிக்கு முடிவடைகிறது. இதனுடன் ஆயுஷ்மான் யோகம், சுப கிருத்திகை நட்சத்திரம் (நட்சத்திர அதிபதி சூரியன்), சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம், அமிர்த சித்தி யோகம், திரிபுஷ்கர யோகம் ஆகியவையும் இருக்கும்.
இந்த திரிதியை முடியும் காலை 9.27 மணிக்குள்ளாக எப்போது வேண்டுமானாலும் தங்க நகை வாங்கிக் கொள்ளலாம். அதிலேயும், குளிகை நேரமாக இருந்தால் கூடுதல் சிறப்பு. ஏனென்றால் குளிகை நாம் செய்வது எதுவாக இருந்தாலும் அது திரும்ப திரும்ப நடக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று குளிகை பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி காலையில் தங்கம் வாங்க முடியாவிட்டால், முதலில் மஞ்சள், உப்பு, அரிசி வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு கூட தங்கம் வாங்கலாம்.
விரதம் இருப்பது எப்படி?
நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தங்கம் வாங்க இயலாதவர்கள் அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும்.
யாரை வழிபட வேண்டும்?
இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமி நாராயணர் ஆகியோரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து விரதமிருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வத்தை பெற்று சிறப்பான வாழ்க்கையை பெற்றிடலாம்.
விரதம் இருப்பது எப்படி?
அட்சய திருதியை நாளன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். கோலம் போட்டபின் அதன்மேல் ஒரு பலகை வைத்து அதில் கோலமிடுங்கள். அதில் வாழை இலையை போட்டு, அதன் நடுவே பச்சரிசியை பரப்பி, அதன்மேல் செம்பில் நீர் நிரப்பி, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக அமைத்திடுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள்.
லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். பின்னர் காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு வாழையிலையில் வலப்பக்கம் வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். முதலில் விநாயகரை மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.
அன்றைய தினம் மாலையில் கலசத்துக்கு மீண்டும் தூப தீப ஆராதனையை காட்டி, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். அட்சய திருதியை நாளில் பயன்படுத்திய அரிசி, கலச தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம்.
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது விட முக்கியமானது தானமளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்!
