Thursday, November 2, 2023
HomeSlogamஜெப மாலை தந்த சற்குருநாதா!

ஜெப மாலை தந்த சற்குருநாதா!

திருஆவினன்குடிப் பெருமாளே!!
*
பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது 3ஆம் படை வீடான ‘திருஆவினன்குடி’, திரு (ஸ்ரீமகாலக்ஷ்மி) + ஆ (காமதேனு) + இனன் (சூரியன்) + கு (பூமி தேவி) + டி (அக்கினி தேவன்) ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ள இத்தலத்தில் ஆறுமுகக் கடவுள் அருணகிரிநாதருக்கு ஜபமாலை தந்து அருள் புரிந்துள்ளான், இந்நிகழ்வினைப் பின்வரும் திருப்புகழில் அருணகிரியார் அகச்சான்றாகப் பதிவு செய்துள்ளார்,

அபகார நிந்தைபட்டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
உனை நானினைந்தருள் பெறுவேனோ

இபமாமுகன் தனக்கிளையோனே
இமவான் மடந்தைஉத்தமிபாலா

ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருஆவினன்குடிப் பெருமாளே.

மேலும் திருஆவினன்குடிக்கும், மலையுச்சியிலுள்ள பழனிக்குமாய்ச் சேர்த்து மொத்தம் 97 திருப்புகழ் திருப்பாடல்களை அருணகிரிநாதர் அருளியுள்ளார் என்பது மற்றொரு முக்கியக் குறிப்பு (சிவ சிவ)!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 18 =

Most Popular